சீக்கியர்களின் புனிதத் தலமான மீதா ரீதா சாஹிப் 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட இடமாகும். கோரக்பாந்தி ஜோகிகளுடன் மதம் மற்றும் ஆன்மிக விவாதங்களை மேற்கொள்வதற்காக குரு நானக் இந்த இடத்திற்கு வந்ததாக சொல்வது வரலாறு.
ரடியா மற்றும் லோதியா நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள இனிப்பான ரீதா என்ற பெயருடைய சாபின்டஸ் எமார்கிநாடஸ் மரங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.
மீதா ரீதா சாஹிப்பிற்கு மிகவும் அருகிலேயே தேர்நாத் கோவிலும் அமைந்துள்ளது. பைசாகி பூர்ணிமாவின் போது ஒரு பெரிய திருவிழா ஒன்றும் இந்த கோவிலில் நடத்தப் பட்டு வருகிறது. லோஹகாட் முதல் தேவிந்தூரா சாலையில் உள்ள துனாகட்டில் இருந்து இந்த கோவிலை எளிதில் அடைய முடியும்.



Click it and Unblock the Notifications