உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகார் மாவட்டத்தில் பஞ்சசூலி பனியாறு அமைந்துள்ளது. குமாவோனின் கிழக்கில் அமைந்துள்ள இந்த பனியாற்றை சுற்றியுள்ள பனி படர்ந்த மலைகள் முதன்மையான சுற்றுலா பார்வையிடங்களாக கருதப்படுகின்றன.
பித்தோரகாரிலிருந்து 134 கிமீ தொலைவில் உள்ள சோப்லா பேருந்து முனையத்திலிருந்தும் மற்றும் 35 கிமீ தொலைவிலுள்ள தார்சூலாவிலிருந்தும் இந்த இடத்தை அடைந்திட முடியும். சோப்லாவிலிருந்து 40 கிமீ மலையேற்றம் செய்தும் பஞ்சசூலி பனியாற்றை அடைய முடியும்.
இந்த மலையேற்ற பாதை பனி படர்ந்த மலைகளையும், அல்பைன் புல்வெளிகளையும் கடந்து செல்வதாக இருக்கும். இந்த இடத்திலிருக்கும் கிராமங்களில் தங்கி செல்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த பிரதேசத்தின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று இந்த பனியாற்றைச் சேர்ந்த சுற்றுலாத் துறையினர் ஊக்கம் தருகின்றன.



Click it and Unblock the Notifications