கோல்வின் தாலுக்தார் காலேஜ் இந்தியாவிலுள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது ஆக்லண்ட் கோல்டுவின் என்ற ஆவாத மாகாண லெஃப்டினண்ட் கவர்னரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோமதி ஆற்றங்கரையில் புராண ஹைதராபாத் பகுதியில் ஹசன்கஞ்ச் எனும் இடத்தில் இந்த கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் தாலுக்தார்கள் போன்ற உயர்குடி வகுப்பினரின் குழ்ந்தைகளுக்கு கல்வி புகட்டும் நோக்கத்துடன் ஆரம்பத்தில் துவங்கப்பட்டிருக்கிறது.
பள்ளி இறுதி தேர்விற்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இது பொதுமக்களுக்கும் திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த பள்ளியில் பயிலும் ஆண் மாணவர்களுக்காக ஆவாத், அஞ்சுமான் மற்றும் ஹிந்த் என்ற பெயர்களில் மூன்று விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்ற இந்த பள்ளியிலும் ஐந்து ‘ஹவுஸ்’கள் உள்ளன. இவை அஜந்தா, நாளந்தா, சாஞ்சி, தக்ஷிலா மற்றும் உஜ்ஜைன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இந்த கல்லூரியில் வருடாந்திர விழா நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்த விழா தர்பார் டே என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் மிக முக்கியமான பிரபல்யங்கள் இந்த பள்ளியிலிருந்து உருவாகியுள்ளனர். ஜாவேத் அக்தர், ஜித்தேந்திரா பிரசாத் மற்றும் முஸாபர் அலி போன்றோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்