மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது.
லுங்க்லெய் நகரத்தில் வளமையான பல தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு சொர்கமாக விளங்குகிறது இந்நகரம். லுங்க்லெய்யிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மோல்செங் என்ற கிராமத்தில் புத்தரின் செதுக்கிய ஓவியம் ஒன்றை காணலாம்.
இதில் அதிசயப்படுகிற விஷயம் என்னவென்றால் இந்த மாநிலத்திலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் பழங்காலத்தை சேர்ந்த இந்த புத்த ஓவியம் உள்ளது. இது ஒன்று மட்டும் இங்கே எப்படி வந்தது என்ற மர்மம் நீடிப்பதால் லுங்க்லெய் சுற்றுலாவை சுவாரசியமாக மாற்றியுள்ளது இது.
லுங்க்லெய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
லுங்க்லெய்யை சுற்றி பல கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், காம்சவி பூங்கா, சைகுடி ஹால் மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் ஆகிவைகள் அவற்றில் சில. மேலும் நதியோரமாக உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்காகவும் லுங்க்லெய் சுற்றுலா புகழ் பெற்று விளங்குகிறது.
லுங்க்லெய்யை அடைவது எப்படி?
மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது லுங்க்லெய்யின் மாவட்ட தலைமையகம். தலைநகரோடு மட்டுமல்லாமல் மிசோரத்தின் உள்ள மற்ற பகுதிகளோடும் லுங்க்லெய் இணைக்கப்பட்டுள்ளது.
லுங்க்லெய்யின் வானிலை
லுங்க்லெய் மாவட்டத்தில் வருடம் முழுவதும் இனிமையான வானிலையே நிலவும். அனைத்து காலங்களிலும் இதன் வானிலை எப்போதாவது தான் அதிகரிக்கும், அதுவும் தாங்கிக்கொள்ளும் அளவில் தான் இருக்கும். இதனால் வருடத்தில் அனைத்து காலங்களிலும் இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.