ஜமுலா கோவில், இந்த பகுதியில் வாழ்ந்தவராக கருதப்படும் ஜமுலா ரிஷி தேவ்தா என்ற துறவியின் நினைவாக கட்டப்பட்டுள்ள கோவிலாகும். புராணக்கதைகளில் இந்த துறவியானவர் தியானம் செய்ய ஏற்ற இடத்தை தேடியதாகவும், அப்பொழுது தன்னுடைய பையில் 18 வேறு வேறு கடவுள்களின் படங்களை வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் காற்றின் காரணமாக அவருடைய பையிலிருந்த எல்லா படங்களும் பியாஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விட்டன. இந்த படங்கள் விழுந்ததாக கருதப்பட்ட 18 இடங்கள் இப்பொழுது இப்பகுதி மக்களின் புனித தலங்களாக கருதப்படுகின்றன. தற்பொழுது இந்த கோவில் இறுதி முடிவுகளை எடுப்பதற்காக நடக்கும் பிரச்னைகளை முடிவு செய்யும் இடமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications