மயிலாடுதுறையில் உள்ள 'பெரிய கோவிலாக' ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. மாயூரத்தின் கணவர் என்ற பொருளுடைய 'மாயூரநாதசுவாமி' இக்கோவிலின் முதன்மை கடவுளாவார்.
ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானின் சாபத்திற்குள்ளாகி பெண்மயிலாக பிறந்திருந்தார். அவர் மாயூரா என்ற...
அறிவை தேடுபவர்களுக்கு ஒரு ஆசானாக, குருவாக சிவபெருமானை தோற்றமளிக்கச் செய்யும் கோவில் தான் தட்சிணாமூர்த்தி கோவில். தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் இருப்பது தமிழ்நாட்டிலும், நாட்டின் தென் பகுதிகளிலும் மிகவும் பிரபலமானது.
தட்சிணாமூர்த்தி என்றால் 'தெற்கு...
வைணவ ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசத்தலங்களில் ஒன்றாக காவிரி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. பச்சைக் கல்லில் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமியானவர் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராவார்.
இவரின் துணைவியாரான...
காவிரி நதிக்கரையில் துலா மலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில், 'தென்னிந்தியாவின் காசி' என்று புகழ் பெற்ற இடமாகும். விஸ்வநாத சுவாமி என்ற பெயர் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் சிவமயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது.
பல்வேறு காரணங்களால்...
மயிலாடுதுறையில் ஒரு மாதம் முழுவதும் நடத்தப்படும் பண்டிகைதான் துலா உற்சவமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி (அக்டோபர்-நவம்பர்) மாதத்தில் நடக்கும் இந்த பண்டிகை ஆயிரமல்ல, இலட்சக்கணக்கான பக்தர்களை மயிலாடுதுறையை நோக்கி வரச் செய்யும் வல்லமை பெற்றதாகும்.
வட...
காவிரி நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில் பரவலாக வள்ளலார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கான இந்த கோவிலுடன் ஒரு புராண கதையும் தொடர்பு பெற்றுள்ளது.
ஒரு முறை சிவபெருமானின் முதல்வரான நந்தி தேவர் தன்னுடைய வலிமையைப் பற்றி...
கூரைநாட்டில் எழுந்தருளியுள்ள புனுகீஸ்வரர் கோவிலின் முதன்மை கடவுளாக சிவபெருமானும், அவரது துணைவியாராக சாந்த நாயகி அம்மையும் உள்ளனர். இந்த இடத்தில் மோட்சமடைந்த புனுகு சித்தரின் பெயரால் இவ்விடம் இப்பெயரைப் பெற்றது.
மயிலாடுதுறை மாஹாங்கால் போன்ற நூல்கள்...
பாலர் வம்சத்தை வெற்றி கொண்டதை நினைவு கூறும் வகையில் ராஜேந்திர சோழர் அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரம். இந்நகரம் சுமார் 250 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகரமாக இருந்தது.
இந்த நகரத்தின் பெயருக்கு கங்கையை வென்ற சோழர் என்று அர்த்தமாகும். உண்மையில், எந்த ஒரு...
மயிலாடுதுறையின் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக ஸ்ரீ ஐயப்பர் கோவில் உள்ளது. ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டு பல்வேறு செப்பு பட்டயங்களில் அவருடைய வரலாறு பதிக்கப்பட்டிருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் போலவே, ஸ்ரீ ஐயப்பர்...
மயிலாடுதுறையின் குறுங்கை சிவன் கோவிலில் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்தபடி காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் தான் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்ததாக சொல்லப்படுகிறது.
சிவபெருமான் கோபமாக பார்க்கும் போது, அவருடைய பார்வையில்...