தேவ்குந்த் என்றழைக்கப்படும் டியோகுந்த்திற்கு தேவ தேவியர்களின் குளியல் தொட்டி என்ற அர்த்தமாகும். பரிபடாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் அதன் பெயரின் அர்த்தத்தை நியாயப்படுத்தும் வகையில் நுட்பமான தகுதிகளை கொண்டுள்ளது.
டியோகுந்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள உடலா என்ற நகரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களை எதனுடனும் ஒப்பிட முடியாதபடி அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
அறுவடை திருவிழாவான மகர சங்கராந்தி ஜனவரி மாதம் கொண்டாடப்படுகிறது. டியோகுந்தை சுற்றிப்பார்ப்பதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும். இங்கு நடக்கும் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் சுற்றுலாப் பயணிகளின் மனதிலும் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும்.
டியோகுந்தின் உச்சியில் இருந்து நகரத்தின் அழகிய காட்சி பரப்பை கண்டுகளிக்கலாம். அலுப்புத் தட்டும் வாழ்க்கைக்கும் ஆன்மீக அமைதிக்கும் இடையே உள்ள தூரத்தை இந்த இடத்தின் அழகிய காட்சிப்பரப்பு போக்கி அமைதியை உண்டாக்கும்.
நீர்வீழ்ச்சியின் மேல் அமைந்துள்ள டியோகுந்த் அம்பிகை கோவிலில் இருந்து இந்த வட்டாரத்தின் அகலப் பரப்புக் காட்சியை கண்டுகளிக்கலாம். இருப்பினும் இங்கிருந்த அம்பிகை தேவியின் தேளை பரிபடாவில் உள்ள அம்பிகை கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.



Click it and Unblock the Notifications