கிச்சிங் என்பது பழங்காலத்தில் இருந்தே ஒரு கோவில் நகரமாக விளங்குகிறது. இந்நகரம் 9 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை பஞ்ச் அரசாட்சிக்கு தலைநகரமாக விளங்கியது. கலை, மரபு, கட்டடக்கலை மற்றும் பண்பாடு இங்கே காலகாலமாக தொடர்ந்து வருவதால் காலத்தில் தொலைந்த கிச்சிங் நகரத்தின் மனமை நாம் உணரலாம்.
பஞ்ச் அரசாட்சியை ஆண்டவர்கள் மாதா கிச்சகேஷ்வரியை தீவிர பக்தியுடன் வழிபாட்டு வந்தனர். இந்த கடவுளை கிஜிங்கேஷ்வரி என்றும் அழைப்பார்கள். மாதா கிச்சகேஷ்வரிகாக கட்டப்பட்டுள்ள கோவிலை காண சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மயுர்பஞ்ச்சிற்கு வருவதுண்டு.
இக்கோவிலில் தெய்வத்தை வணங்க தலை குனிந்த அரசர்கள் மாண்டு சீக்கரத்திலேயே மறக்கப்பட்டும் விடுவார்கள். இதனை உடைத்தெறிந்தது 1925-ல் பஞ்ச் அராசட்சியை ஆண்ட பூர்ண சந்திர பஞ்ச் டியோ மற்றும் அவரின் சகோதரரான பிரதாப் சந்திர பஞ்ச் டியோ அவர்களே.
கோவிலுக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் பழங்காலத்தை சேர்ந்த பல கலைப்பொருட்களும் சிலைகளும் உள்ளன. சிவராத்திரியின் போது இங்கே ஏழு நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் இந்நேரத்தில் இங்கு சுற்றுலா வருவது உகந்ததாக இருக்கும்.



Click it and Unblock the Notifications