வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி அமைந்துள்ளது. உண்மையாகவே இந்த உலகத்தின் அமைதியை மான் பகுதியில் அனுபவிக்கலாம். ஏனெனில் மான், நகர வாழ்க்கையின் நரகச் சூழல்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு சென்றாலே ஒரு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள நாகாலாந்து மாநிலத்தில், மான் மாவட்டம் அமைந்திருக்கிறது. இதன் வடக்கு பகுதியில் அஸ்ஸாம், தெற்கு பகுதியில் மியான்மர் மற்றும் மேற்கு பகுதியில் மோக்கோக்சுங் மற்றும் டியுவென்சங் போன்ற பகுதிகள் எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம்
மான் ஒரு சிறந்த கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் மான் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த கலாச்சாரம் பண்பாட்டின் சொர்க்கமாகவே விளங்குகிறது என்று சொல்லலாம்.
மான் மாவட்டத்தில் கன்யாக்ஸ் என்ற இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் போர் புரியும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதன் அடையாளமாக தங்கள் உடலில் பச்சை குத்தியிருப்பர்.
இங்கு இருக்கும் கிராமங்களில் வாழும் கன்யாக்ஸ் ஆண்களும் பெண்களும் தங்கள் பாரம்பரியத்தைக் கைவிடாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் ஏராளமான ஆபரணங்களைத் தங்கள் உடலில் அணிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மிகப் பெரிய வளையங்களைத் தங்கள் காதுகளில் அணிந்திருக்கின்றனர்.
கன்யாக்ஸ் இனத்தில் தென்டு மற்றும் தென்தோ என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. தென்டு மக்கள் தங்கள் முகத்தில் பச்சை குத்தியிருப்பார்கள். அதை வைத்து அவர்கள் தென்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
ஆனால் தென்தோ பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்கள் முகத்தில் பச்சை குத்தாமல், வெள்ளை முகத்துடன் காணப்படுவார்கள். இதை வைத்து அவர்கள் தென்தோ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
தென்டு பிரிவைச் சேர்ந்த மக்கள் மான் மாவட்டத்தில் இருக்கும் டோபு பகுதியின் கீழ் பகுதியிலும், தென்தோ பிரிவைச் சேரந்தவர்கள் டோபு பகுதியின் மேல் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தென்டு மக்களின் ஆட்சியாளர்கள் ஆன்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த தென்டு மக்களை அவர்களின் பச்சை குத்தப்பட்ட முகங்களைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.
விழாக்காலம்
ஏப்ரல் மாதம் கன்யாக்ஸ் மக்களின் விழாக்காலம் ஆகும். இந்த மாதத்தில் எவோலியோன்க் மான்யு என்று ஒரு பெரிய விழாவைக் கொண்டாடுவர்.
ஒரு வாரம் நடைபெறும் இந்த விழா அறுவடை விழாவாக அல்லது வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகக் கொண்டடப்படுகிறது. மான் பகுதிக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் ஏப்ரல் மாதத்தில் சென்றால் சிறப்பாக இருக்கும்.