கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம் ஆகும்.
வெம்மையான நீரூற்றுகள் தவிர்த்து, இச்சரணாலயத்தில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. மலைக்குரங்குகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்குகளின் இருப்பிடமாகத் திகழும் கரம்பானி வனவிலங்குகள் சரணாலயத்தில் பல்வேறு வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற விலங்குகளையும் காணலாம்.
இவை தவிர புலிகள், யானைகள், காட்டெருதுகள், ஹார்ன்பில், மலைப்பாம்புகள், நாகப்பாம்புகள் மற்றும் ராட்சத பல்லிகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.
கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், கொலாகாட் என்ற இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், காசிரங்கா தேசியப் பூங்காவிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்திலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலாந்தின் திமாப்பூர் விமான நிலையமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே இங்கு செல்ல ஏதுவானதாகும்.