சமீபத்தில், இந்திய அரசாங்கம் பசுமை சுற்றுலா, டிஜிட்டல் சுற்றுலா, இலக்கு மேலாண்மை, விருந்தோம்பல் துறையில் திறன் மற்றும் (MSMEs) சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மையமாகக் கொண்டு தேசிய சுற்றுலாக் கொள்கை வரைவைத் தயாரித்து, அதனை தொழில் பங்குதாரர்கள், மாநில அரசுகள் மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்களுக்கு கருத்துக்காக அனுப்பி வைத்தது.
இ-டூரிஸ்ட் விசாவிற்கான மொபைல் ஆப், முக்கிய வெளிநாட்டு சந்தைகளுடன் நேரடி விமான இணைப்பு, சுற்றுலா தலங்களை வகைப்படுத்துதல், சிறப்பு சுற்றுலா மண்டலங்கள் மற்றும் சுற்றுலாவின் நிலையான, பொறுப்பான மற்றும் மேம்பட்ட வளர்ச்சி கொண்ட ஐந்து பயணங்களை உருவாக்குதல் ஆகியவை புதிய தேசிய கொள்கையின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் முதல் ஐந்து டெஸ்டினேஷன்களில் ஒன்றாக மாற்றுவது என்பது கொள்கையின் முதன்மை இலக்காகும், இது நாம் எதிர்கொண்டு வரும் தொற்றுநோயின் நீண்டகால தாக்கங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுலா அமைச்சகத்தால் சில சேர்த்தல்களுடன் முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய டூரிசம் பாலிசி கருத்துக்காக பல அமைச்சகங்கள், மாநிலங்களுடன் கொள்கை பகிரப்பட்டது.
"தொற்றுநோய்க்குப் பின், சுற்றுலாத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்றால்தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் என்பதுதான் முதன்மையான யோசனை. கொள்கையில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன, அதை நாங்கள் மிஷன்களாக எடுத்துக்கொள்வோம். அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் மத்தியில் கொள்கை பகிரப்பட்டது, அவர்களிடமிருந்து வரும் கருத்துக்களை ஆய்வு செய்த பிறகு, கொள்கையை அறிவிப்பதற்கான செயல்முறை விரைவுபடுத்தப்படும், "என்று சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராகேஷ் குமார் வர்மா கூறினார்.
நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைவதற்கு, தேசிய கட்டமைப்பை செயல்படுத்த, தனியார் துறையுடன் கூட்டுறவை உருவாக்குதல் மற்றும் இலக்கு திட்டமிடல், மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக அரசாங்கம் தேசிய பசுமை சுற்றுலா இயக்கத்தை அமைக்கும் என்று கொள்கை கூறுகிறது.
மேலும், டிஜிட்டல் டூரிஸம் மிஷன் ஒரு ஒருங்கிணைந்த சுற்றுலா இடைமுகத்தை உருவாக்க டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
"சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவை வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகின்றன. செக்டோரல் ஸ்கில் மிஷன் அதிக மக்களை வேலைவாய்ப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அந்தத் துறையில் அந்த நபர்கள் எவ்வாறு உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் சரிபார்க்கும்," என்று வர்மா கூறினார்.
DMO கள் மீதான நேஷனல் மிஷன் ஆனது பங்குதாரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதையும், இலக்குகளை தனித்தனியாக மேம்படுத்த நிறுவன ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த டூரிசம் மிஷனில் MSME களின் நோக்கம், அரசாங்கங்களால் கிடைக்கப்பெறும் பல்வேறு நன்மைகளை நிறுவனங்கள் பெறுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குடியேற்றம் மற்றும் சுங்க அனுமதியின் போது தரவைச் சரிபார்க்க சுற்றுலா மற்றும் உள்துறை அமைச்சகங்களால் மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவின் உலகளாவிய வரைபடத்தில் இந்தியாவைக் கொண்டுவரவும், பாராட்டு, அங்கீகாரம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தைத் தொடங்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.