இந்தியாவின் மிக நீளமான ரிவர் க்ரூஸ் சேவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் அசாமில் உள்ள போகிபீல் இடையே 4,000 கிமீ தூரத்தில் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த பாதை கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளை இந்தோ பங்களாதேஷ் புரோட்டோகால் பாதை (IBRP) வழியாக இணைக்கும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் (MoPSW) அமைச்சர் கூறினார்.
போகிபீல் மேம்பாட்டிற்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர் பேசிய அமைச்சர், அஸ்ஸாம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு நீர்வழிகளை பயன்படுத்த புதிய வாய்ப்புகளை இந்த பாதை உருவாக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது, அதில் கோஸ்டல் கன்சோலிடேட்டட் ஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு EPC ஒப்பந்த முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது (பொறியியல், கொள்முதல், கட்டுமானம்). இரண்டு ஜெட்டிகளும் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, பிப்ரவரி, 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்ரா கிராக்கர் & பாலிமர் லிமிடெட் மற்றும் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரக் கழகம் போன்ற அண்டை தொழில்களில் இருந்து சரக்குகளை சிரமமின்றி கொண்டு செல்வதற்காக போகிபீலில் நிரந்தர சரக்கு முனையமும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இதன் மூலம், இதுதான் இந்தியாவில் புதிதாக உருவாகவிருக்கும் ரிவர் க்ரூஸ் ஆகும். அடுத்த ஆண்டு நீங்கள் வாரணாசி செல்லும்போது இந்த ரிவர் க்ரூஸில் பயணிக்கலாம். இது நிச்சயமாக இந்த சுற்றுலாத் தலங்களில் மிகவும் தனித்துவமான அனுபவமாக இருக்கும் மற்றும் நிச்சயமாக இங்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.