இடைக்காலத்தில் குஜராத்தின் தலைநகரமாக விளங்கிய படன், இன்று காலஞ்சென்ற அந்த சகாப்தத்தின் அடையாளமாக நிற்கிறது. கோட்டை நகரமான படன், 8-ஆம் நூற்றாண்டில் சாளுக்ய ராஜ்புட்டின் சாவ்டா அராங்கத்தின் மன்னனான வன்ராஜ் சாவ்டாவால் கட்டப்பட்டது. வன்ராஜ் அரசரின் ஆடு மேய்க்கும் நண்பனான அனஹில் என்பவற்றின் நினைவாக இந்த நகரத்தை அன்ஹில்வாட் படன் என்றும் அழைக்கப்பட்டது.
இன்று அழிந்த நிலையில் உள்ள அரண்மனையோடு இருக்கிறது இந்த நகரம். குதுப்-உட்-டின்-அய்பக் என்ற டெல்லியை சேர்ந்த சுல்தானால் சூறையாடப்பட்டதால் தான் இது இந்த நிலையில் உள்ளது.
இஸ்லாமியர்களின் ஆளுமை இங்கு இருந்ததால் இங்கே சில இஸ்லாமிய கட்டடங்களை காணலாம். அவை அஹமதாபாத்தில் உள்ளதை விட பழமையானவை ஆகும்.
மேலும் இங்கே சாளுக்யா அல்லது சோலாங்கி காலத்தில் கட்டிய எஞ்சியுள்ள கட்டடங்களான ராணி கி வாவ், த்ரைகம் பரோட் னி வாவ், கல்காவிற்கு அருகில் இருக்கும் பழைய கோட்டை, சஹஸ்ரலிங்க சரோவர் போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிய ஈர்ப்பாக விளங்குகிறது. ஜெயின் மதத்தினரின் முக்கிய மையமாக விளங்குகிறது படன்.
அதற்கு சோலாங்கி காலத்தில் இங்கு கட்டப்பட்ட ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களே சாட்சி. தற்போது மஷ்ரு நெசவாளர்களால் சல்விவாத்தில் நெய்யப்படும் படோலா புடவைகளுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது படன்.