ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுங்சாலையான NH-1A வழியாக சுற்றுலாப் பயணிகள் பாட்னிடாப்பை டாக்ஸிகள் மற்றும் பேருந்துகைளப் பயன்படுத்தி அடைய முடியும். ஜம்மு காஷ்மீர் சுற்றுலா வளர்ச்சி கழகம் (JKTDC) ஜம்மு இரயில் நிலையத்திலிருந்தும், விமான நிலையத்தில் இருந்தும் சில சொகுசு பேருந்துகளையும் பாட்னிடாப்பிற்கு இயக்கி வருகிறது. பாட்னிடாப்பிலிருந்து வைஷ்ணவோ தேவி கோவில் செல்வதற்கான காட்ரா என்ற இடத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் ஜம்முவிலிருந்து பாட்னிடாப்பிற்கு வாடகை கார்களையும் அமர்த்திக் கொள்ள முடியும்.