கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக இந்த பய்யோலி கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.
பய்யோலி கிராமம் அதன் தனித்துவம் மிக்க உணவு வகைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதிலும் பய்யோலி கோழி பரிச்சாட்டு என்று அழைக்கப்படும் பய்யோலி சிக்கன் ஃபிரையின் சுவையை போல நீங்கள் வேறெங்கும் ருசித்திருக்க முடியாது.
இந்த வகை சிக்கன் ஃபிரையை சிவப்பு மிளகாய் மற்றும் பலதரப்பட்ட மசாலா வகைகளை கொண்டு வித்தியாசமான முறையில் பய்யோலி நகரவாசிகள் அவர்களுக்கே உரிய பாணியில் தயார் செய்வார்கள். எனவே இந்த சிக்கன் ஃபிரையை ஒருமுறை சுவைத்துப் பார்த்தாலும் நீங்கள் உங்கள் வாழ் நாள் முழுக்க இதன் ருசியை மறக்க மாட்டீர்கள்.
பய்யோலி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது நீங்கள் குஞ்சாலி மரக்கார் மியூசியம், வெல்லியம்கல்லு மற்றும் திருக்கொத்தூர் பெருமாள்புரம் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
இதில் திருக்கொத்தூர் பெருமாள்புரம் கோயில் பய்யோலி பீச்சுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து சுலபமாக அடைந்து விட முடியும்.