நாகாலாந்து இந்தியாவின் அதிகம் அறியப் படாத பகுதிகளில் ஒன்று. இந்த மாநிலம் இயற்கை அன்னை தந்த கொடைகளை அதன் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளில் சேமித்து வைத்துள்ளது. எனவே, இங்கு ஒரு முறை வருகை புரிந்த எவரும், திரும்ப வரும் எண்ணத்தோடே இங்கிருந்து செல்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த நாகாலாந்து மாநிலத்தில், இயற்கை அன்னை தன்னுடைய உன்னத படைப்புகளை பொத்தி பாதுகாத்து வரும் ஒரு உன்னத இடமாக `பெக்' விளங்குகிறது.
பெக், இயற்கை அழகு மற்றும் மற்றும் கலாச்சாரம் சங்கமிக்கும் ஒரு சிறந்த சுற்றுலா தலளமாகும். இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டமும் அதே பெயருடன் அழைக்கப்படுகிறது. பெக் மாவட்டம் நாகாலாந்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் கிழக்கே மியான்மரும், தெற்கில் மணிப்பூர் மாநிலமும், வடக்கில் கோஹிமா மாவட்டமும், மேற்கில் ஸுன்ஹிபோடோ மற்றும், துன்சாங்க் மவட்டமும் எல்லைகளாக உள்ளன்.
சிறிது காலத்திற்கு முன்பு வரை பெக் கோஹிமா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது கோஹிமா நகரத்தில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பெக் மாவட்டம் `சக்ஹெஸாங்க்', `போச்சுரி' போன்ற பழங்குடி இன மக்களின் இருப்பிடமாக உள்ளது. இதில் ஆச்சர்யமாக போச்சுரி பழங்குடி இனம் என்பது `சோக்ரி', `ஹிஸா', மற்றும் `சாங்' ஆகிய மூன்று துணை பழங்குடியினரின் கலவையாக உள்ளது.
ஆற்றின் அழகில் பயணிகள் இதயம் பறி போய் விடும்...
இவற்றை தவிர பெக் பள்ளத்தாக்கில் பல அரிய வகை மல்லிகைகள் காணப்படுகின்றன. பெக் பல்வேறு விலங்குகள் மற்றும் தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது. இங்கு `ப்ளிதின் ட்ராகோபன்' என்கிற அரிய வகை ஃபீசன்ட் காணப்படுகிறது.
மேலும் இங்கு குதோன்யே, துரின்யே, துர்ஹின்யே, நுகுன்யே, துக்ஹான்யே, மற்றும் சுக்ருன்யே போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.