ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நீர்வீழ்ச்சி நகரம் என அழைக்கப்படுகிறது. சோடா நாக்பூர் பீடத்தில் உள்ள ராஞ்சி, கடல் மட்டத்தில் 2140அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், குன்றுகளும், பாறை வடிவங்களும் உள்ளன. வருடம் முழுதும் மிதமான வானிலையே நிலவுகிறது.
1831-ல் கோல் புரட்சியில் உதயமாகி லோஹர்டங்கா என்றழைக்கப்பட்ட ராஞ்சி 1899ல் ராஞ்சி என மாற்றப்பட்டது.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
நீர்வீழ்ச்சிகளின் நகரம் என்றழைக்கப்படும் ராஞ்சியில் தசாம் நீர்வீழ்ச்சி, கன்ச்னி நதி, சுபர்னரேகா நதியின் தசாம் நீர்வீழ்ச்சி என ஏரிகளும், நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.
சுபர்னேகாவின் ஹுன்ட்ரு நீர்வீழ்ச்சி 320அடி உயரத்தில் இருந்து விழுகிறது. ஜோனா நீர்வீழ்ச்சி ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ளது. 500 படிகள் இறங்கி இந்த நீர்வீழ்ச்சியின் அழகைக் காணலாம்.
புத்தர் கோவிலுடன் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றும் இங்குள்ளது. மேலும் நட்சத்திரா வான், கோண்டா, தாகூர் மலை ஆகிய இடங்களும் உண்டு.
புவியியல் அமைப்பு
டெக்கான் பீடத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சோடா நாக்பூர் பீடத்தின் தென் பகுதியில் ராஞ்சி அமைந்துள்ளது. சுபர்னரேகா நதி மற்றும் அதன் துணை நதிகளில் கன்கே, ஹடியா மற்றும் ருக்கா நதிகள் கட்டப்பட்டுள்ளன.
மலை சார்ந்த பகுதியான ராஞ்சி அடர்த்தியான காடுகளை உள்ளடக்கியுள்ளதால் மிதமான வானிலையே நிலவுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் ராஞ்சி மலைப்பகுதியாக விளங்கியது.
மக்கள் தொகை மற்றும் தொழில்துறையின் அசுர வளர்ச்சியால் வானிலை மிகவும் மாறுபட்டுள்ளது. சராசை வெப்பநிலையும் சமீபத்தில் உயர்ந்துள்ளது.
ராஞ்சி பயணிக்க சிறந்த பருவம்
அக்டோபர் முதல் மே மாதம் வரை ராஞ்சி செல்ல சிறந்த மாதங்களாகும்.
ராஞ்சி பயணிக்கும் வழி
மாநிலத்தின் மற்ற ஊர்களுடன் சிறப்பான ரயில் மற்றும் சாலை வசதிகளை ராஞ்சி கொண்டுள்ளது.