மத்திய பிரதேசத்தில் உள்ள தொன்மையான அருங்காட்சியகங்களுள் பகேல் அருங்காட்சியகமும் ஒன்றாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அருங்காட்சியகத்தை, மத்திய பிரதேச அரசாங்கம் பராமரித்து வருகிறது.
ரேவா நகரில், கோவிந்த்கர் அரண்மனையில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம், ரேவா நகர மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்த பல சுவாரஸ்யமான ஆவணங்களைக் கொண்டுள்ளது.
இங்கிருக்கும் காட்டில் இருந்த வெள்ளைப்புலியை வேட்டையாடியிருக்கிறார் ரேவாவின் அரசர். அந்த வெள்ளைப் புலி, இந்த அருங்காட்சியகத்தில் தான் வைக்கப்பட்டிருக்கிறது.
இதனை ஊர்மக்கள், மோகன் என பெயரிட்டு மகிழ்கின்றனர். மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படும் பகேல் அருங்காட்சியகத்தை, ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் தான் பார்வியிட முடியும். அருங்காட்சியகத்தில் இருக்கும் பல அரிய வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க, சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications