வெள்ளைப் புலிகளின் நகரமான ரேவாவில் அமைந்திருக்கிறது வெங்கட் பவன். இதனைக் கட்டியவர் மஹாராஜா வெங்கட் ராமன் சிங் என்பவர் ஆவார். 1894 ஆம் ஆண்டு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் கட்டப்பட்டது வெங்கட் பவன்.
425 சதுர மீ அளவில் அமைந்திருக்கும் இக்கட்டிடம், 1907 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வெங்கட் பவனின் வாயிலில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மிகப் பெரிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மிகவும் கலைநயத்துடன் அமைந்திருக்கும் இச்சிலைகள், அருகில் இருந்த ஒரு பாழடைந்த கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும். இந்த கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்களின் 12 கதவுகள் உள்ளன.
வெங்கட் பவன் முழுவதுமே இறைவைனின் திருவுருவச் சிலைகளால் அலங்கரிக்கப்படுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் வெங்கட் பவன்.



Click it and Unblock the Notifications