பிஷ்மாக்நகர் அருணாச்சலப் பிரதேசத்தின் பிரபலமான தொல்பொருளியல் மற்றும் பாரம்பரிய ஸ்தலமாகும். ரோயிங்கிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள பிஷ்மாக்நகர் கோட்டையே இதன் பிரபலத்துக்கு முக்கிய காரணமாகும்.
எரிக்கப்பட்ட செங்கல்களால், 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை, மாநிலத்தின் மிகப் பழமையான தொல்பொருளியல் ஸ்தலங்களுள் ஒன்றாகும். இந்த இடம் அருணாச்சலப் பிரதேசத்தின் மலைஜாதிப் பிரிவான இடு மிஷ்மிக்களின் புனித பாரம்பரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது.
இந்த இடத்தில் நிகழ்த்தப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகளின் போது, மண்ணாலான பெயர்ப்பலகைகள், மண்ணாலான உருவச்சிலைகள், கலைவேலைப்பாடுகள் கொண்ட தட்டோடுகள் மற்றும் பானைகள் போன்ற ஏராளமான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.