ஷிவனசமுத்ரம் அல்லது ஷிவசமுத்ரம் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம் ஆகும். ஷிவசமுத்ரம் என்பதற்கு ‘ சிவனுடைய சமுத்திரம்’ என்பது பொருளாகும். இது காவிரி ஆற்றில் உள்ள புராதனமான தீவு நகரமாகும்.
தீவு, நீர்வீழ்ச்சி மற்றும் உற்சாகம்
ஷிவனசமுத்ரம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக பெயர்பெற்றுள்ளது. உலகில் 100 முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக இது அறியப்பட்டுள்ளது.
தக்காணப் பீடபூமியின் பாறைப்படுகைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியே ஓடிவரும் காவிரி ஆறு இங்கு ‘ககனசுக்கி’ மற்றும் ‘பரச்சுக்கி’ எனும் எனும் இரண்டு கிளைகளாக பிரிகிறது. இப்படி பிரியும் காவிரி ஆற்றின் இந்த இரண்டு கிளைகளும் வேகத்துடன் ஒரு பெரிய சிகரத்திலிருந்து 98 மீட்டர் உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியாய் சரிகின்றன.
ககனசுக்கி ஆற்றின் வீழ்ச்சி மலையின் மேற்குப்பகுதியிலும் பரச்சுக்கி ஆற்றின் நீர்வீழ்ச்சி கிழக்குப்பகுதியிலும் வீழ்கின்றன. ககனசுக்கி நீர்வீழ்ச்சியின் அழகை ஷிவனசமுத்ர காட்சிக் கோபுரத்திலிருந்து பார்து மகிழலாம். இது ஹஸ்ரத் மர்தானே கைப் தர்க்காவுக்கு அருகில் உள்ளது.
பரச்சுக்கி ஆற்றின் நீர்வீழ்ச்சி ககனசுக்கி நீர்வீழ்ச்சியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது வேகமான சுழல்களையும் ஆழமான பாறைப்பிளவுகளையும் கொண்டுள்ளது.
தொன்மையான கோயில்களைக்கொண்ட இந்த புராதன ஷிவசமுத்திர நகரத்தில் ஆசியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைந்துள்ளது. இது கோலார் தங்கச்சுரங்கத்துக்கான மின்சாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது.
ஷிவனசமுத்ரா பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஜுலை முதல் அக்டோபர் வரையிலான காலம் இங்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்.