சித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில் காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் அன்னாசி பழம் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன.
அதனுடைய இயற்கை அழகுக்காக பெரிதும் அறியப்படும் சித்தாபூர், கடல் மட்டத்திலிருந்து 1850 அடி உயரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது. சித்தாபூரின் தோட்டங்களுக்கு இடையே நடை பயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.
சித்தாபூர் நகரின் கவர்ச்சி அம்சங்களில் முக்கியமானது புருடே நீர்வீழ்ச்சி. இது சித்தாபூர்-கும்தா சாலையில் அமைந்திருக்கிறது.
இது தவிர இந்தப் பகுதி நிறைய கோயில்களுக்கும் பிரபலமானது. இங்குள்ள லக்ஷ்மி நாராயண கோயில், கொண்டி மாரிக்கம்பா கோயில் மற்றும் பங்கேஷ்வரா கோயில் ஆகியவை புனித யாத்ரிகர்கள் பலருக்கு புண்ணிய ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
சித்தாபூரை போலவே இயற்கை எழில் கொஞ்சும் அழகழகான கிராமங்கள் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இருக்கின்றன. அவற்றில் அம்மதி என்ற கிராமமும் பெரும்பாலும் காப்பிக் கொட்டை மற்றும் ஏலக்காய் பயிரிடுவதையே தொழிலாக கொண்டுள்ளது.
சித்தாபூரில் நடைபெறும் கொடவா என்று அழைக்கப்படும் ஹாக்கி திருவிழாவை காண வருடந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வர். பொல்லிபெட்டா என்ற புத்த விகாரமும், கோட்டையும் சித்தாபூர் அருகில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
சித்தாபூருக்கு அதனுடைய குளிர்ச்சியான வெப்ப நிலைக்காக கோடை காலத்தில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும். மேலும், அக்டோபரிலிருந்து ஜனவரி வரைக்குமான காலமும் சித்தாபூரை சுற்றிப் பார்க்க உகந்த காலங்களாகும்.
பெங்களூர் விமான நிலையம் சித்தாபூருக்கு அருகாமையில் உள்ளது. அதே சமயம் ரயில் பயணிகள் மைசூர் வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் சித்தாபூரை அடையலாம்.