தேசிய நெடுஞ்சாலை 44, சில்சார், ஷில்லாங், மற்றும் கவுகாத்தியை இணைக்கிறது. இந்த சாலையே சில்சாரின் உயிர்நாடி ஆகும். எனினும், மழை காலத்தில், நிலச்சரிவுகள் மற்றும் மோசமான சாலை நிலைமைகள் காரணமாக, இந்த சாலையில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. கவுகாத்தியிலிருந்து சில்சாருக்கும், சில்சாரிலிருந்து கவுகாத்திக்கும், பகல் மற்றும் இரவு நேரப் பேருந்துகள் ஷில்லாங் வழியாக இயக்கப்படுகின்றன.