மஹாராஷ்டிரா மாநிலத்தின் பல நகரங்களிலிருந்து குறிப்பாக மும்பை, பனாஜி, புனே, கோலாபூர் மற்றும் ரத்னகிரியிலிருந்து அரசுப்பேருந்துகள் சிந்துதுர்க் கோட்டைப் பகுதிக்கு இயக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு கட்டணமும் குறைவு என்பதால் சிக்கனமாக பயணிக்க சிறந்த வழியாக கருதப்படுகிறது. இருப்பினும் பேருந்துகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் பயண நேரம் அதிகம் என்பதாலும் பேருந்து பயணம் சற்று அசௌகரியமாக இருக்க வாய்ப்புண்டு.