பக்மாரா நகரம் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்நகரம் தனது தெற்கு எல்லையை பங்களாதேஷ் நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறது.
மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிப்பகுதிகள் என்று கதம்பமான...
நெங்கோங் என்றழைக்கப்படும் இந்த இடம் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இங்கு மூன்று மலைக்குகைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான டெடங்கோல் பல்வாகோல் குகை 5.33 கி.மீ நீளமுடையதாகும். இது இந்திய துணைக்கண்டத்திலேயே இரண்டாவது நீளமான...
சிஜு எனும் பிரசித்தமான இந்த குகை அமைப்பு சிம்சங் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிற்து. இது தொபாக்கோல் அல்லது வௌவால் குகை என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படுகிறது.
ஸ்டாலக்சைட் மற்றும் ஸ்டாலக்மைட் எனப்படும் சுண்ணாம்பு பாறை படிமங்களால் இந்த குகை உருவாகியிருக்கிறது....
இந்த பல்பக்ராம் எனும் இடம் கரோ மக்களின் புனித பூமியாக கருதப்பட்டு வருகிறது. பல அதிசயங்களை நிகழ்த்தும் ஆவி ரூபங்கள் இப்பகுதியில் வசிப்பதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பல அதிசயங்களை இந்த ஆவிகள் நிகழ்த்துவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்....
இமில்சாங் டரே எனும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி டுரா-சொக்பொட் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது. சாய்வான மலைப்பிளவின் ஊடே இரு பாதைகளில் ஓடிவரும் ஒரு ஓடையில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. நீர்வீழ்ச்சியை அடுத்து இந்த ஓடை ஒரு அழகிய குளத்தில் வந்து சேர்கிறது.
இயற்கை...
டோம்பேவாரே எனும் இந்த அழகிய ஏரியானது ‘ஈமான் அசாக்கிரே’ எனும் சிறு கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 113 பேர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மலையுச்சியின் மீது அமைதியாக வீற்றிருக்கும்...
சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் மையப்பகுதியில் பாயும் சிம்சங் ஆறு இம்மாவட்டத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கிறது. பங்களாதேஷ் நாட்டில் இந்த ஆறு சோமேஷ்வரி என்றழைக்கப்படுகிறது. நோக்ரெக் சிகரத்தில் சிறு ஊற்றாக துவங்கும் சிம்சங் ஆறானது வழியில் தன்னை பெரிதாக்கிக்கொண்டு...