திருமங்கலக்குடி என்னும் கிராமம் தமிழ் நாட்டிலுள்ள தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற பிராணநாதர் கோவில் இங்கு உள்ளது, இக்கோவிலின் மூல கடவுள்கள் பிராணநாதர்(சிவன்), மங்களாம்பிகை(பார்வதி) ஆவர். சூரியனார் கோவிலில் இருந்து 1 கிமீ தொலைவில் இக்கோவில் அமைய பெற்றுள்ளது.
குலோத்துங்க மன்னனின் அமைச்சரான அலைவாணர் மன்னனின் அனுமதியின்றி நாட்டின் வரிப்பணத்தில் இக்கோவிலை கட்டினார். இதனால் கோபம் கொண்ட மன்னரின் உத்தரவுப்படி அலைவாணர் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
அவரின் இறுதி விருப்பத்திற்கு இணங்க அவரது உடல் தகனம் செய்ய திருமங்கலக்குடி கொண்டு வரப்பட்டது. அவர் மனைவி, மங்களாம்பிகையிடம் தன் கணவரின் உயிரை தருமாறு வேண்டிக் கொண்டார். தேவியின் அருளால் அவரும் உயிர் பெற்றார்.
பின்னர் இக்கோவிலுக்கு சென்று கடவுளை கட்டி அணைத்து பிராணநாதா என்று அழைத்தார். அது முதல் அம்பிகை தன்னை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளுவதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications