திருவானைகாவல் அல்லது திருவானைகோயில் என்று அழைக்கப்படும் இந்த தொன்மை வாய்ந்த நகரம் காவேரி ஆற்றின் வடகரையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
திருவானைகாவல் நகரில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்திருப்பதால் இது சிவபக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பக்தர்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தேவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலின் உட்பிரகாரத்தில் அமைத்துள்ள பஞ்சபூதஸ்தலம் எனப்படும் புனித நீர் தொட்டியில் நீராடினால் பாவங்கள் தீர்ந்து மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்று நம்பபடுகிறது.
திருவானைகாவல் நகரம், இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர், சர் சி வி ராமன் பிறப்பிடமாக இருப்பதினால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் பிறந்த இடத்ததை பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக பல சுற்றுலாப் பயணிகளை இந்த சிறிய நகரத்தை தேடி வருகின்றனர். சர் சி.வி. ராமன் தனது வாழ்வின் பெரும்பகுதி நாட்களை கழித்த வீடு இன்னும் இந்நகரத்தில் உள்ளது.