Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» திருவண்ணாமலை

திருவண்ணாமலை - நாகரீக கற்பனையுலகம்!

34

திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில்  மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக கேள்விப்படுவதும் அரிது. பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள்.

இந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள் பிரதிபலிக்கின்றன.

இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது.

தமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது.

அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.

பாரம்பரியமும், திருவிழாக்களும்!

ஒவ்வொரு பௌர்னமி நாளன்றும் சிவபெருமானை வழிபடுவதற்காக பக்தர்கள் வெறும் காலோடு ஆணைமலை குன்றை சுற்றி நடக்கிறார்கள். 14 கி.மீ. தூரம் வெறும் காலோடு நடந்து செல்வதன் மூலம், சிவபெருமான் மீது உள்ள தங்கள் பக்தியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழ் நாள்காட்டியின் படி வருடாந்தர சித்ராபௌர்னமியின் போது உலகெங்கும் இருந்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துவதற்காக, பக்தர்கள் இவ்விடத்தில் குவிகின்றனர்.

இங்கு கொண்டாடப்படும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த பண்டிகை கார்த்திகை மகா தீபம். வட ஆற்காட்டிலும் இந்த பண்டிகை அதிக பக்தியோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகின்றது.

5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருவண்ணாமலையில், திருவிழா காலத்தில் 86 பக்தகோடிகளின் சங்கமத்தை காணலாம். 2900 அடி உயரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது!

மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பத்து நாட்களுக்கு விழா தொடர்ந்து நடைபெறுகின்றது. கார்த்திகை மகாதீபத்தின் போது திரளான பக்தகோடிகள் வருகை தந்தபோதிலும், இதுவரை இந்த பட்டணத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு சீர்கேடும் நடைபெற்றது இல்லை.

அமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்!

திருவண்ணாமலை ஒரு சிற்றூர். சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சிறியோருக்கும், பெரியோருக்கும் இது பாதுகாப்பான நகரம் ஆகும். இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள விபத்துகள் மற்றும் திருட்டுக்களின் எண்ணிக்கை, நாட்டின் குற்ற விகிதத்தோடு ஒப்பிடப்பட்டால் மிகவும் குறைவானது.

மக்கள் இசைவோடு வாழ்ந்து, தங்கள் தொழில்களை இயன்றவரை அமைதியாக செய்கின்றனர். இந்த பட்டணத்தை பெங்களூரோடு இணைக்கின்ற முக்கிய சாலைகளிலேயே இந்த நகரத்தின் தொழில் மையங்கள் இருக்கின்றன.

அணுகுதலும், வானிலையும்!

இந்த நகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இருக்கின்றது. இந்நகருக்கு நெருக்கமான விமான நிலையம் சென்னை சர்வதேச விமானநிலையம் ஆகும். ஆனால், சாலை வழியாக பயணம் செய்வதே இந்த பட்டணத்தை அடைய சிறந்த வழி.

உஷ்ணமான கோடை வெயிலையும், மிதமான மழைப்பொழிவையும், மென்மையான குளிர்காலத்தையும் இந்நகரம் பெற்று இருக்கிறது.

திருவண்ணாமலை சிறப்பு

திருவண்ணாமலை வானிலை

சிறந்த காலநிலை திருவண்ணாமலை

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருவண்ணாமலை

  • சாலை வழியாக
    சுற்றியுள்ள நகரங்களோடும், பட்டணங்களோடும் திருவண்ணாமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த புனித நகரத்தை அடைய தமிழக அரசு எண்ணற்ற பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதோடு திருவிழா காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையையும் அரசாங்கம் அதிகரிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திருவண்ணாமலை ரயில் நிலையம் நகர மையப்பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. மதுரை-திருப்பதி பாதையில் இந்த நகரம் இருப்பதால், மதுரைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து சீராக உள்ளது. எனவே, மதுரையில் இருந்து தொடர்ச்சியாக திருவண்ணாமலைக்கு ரயில் சேவை கிடைக்கப்பெறுகின்றது. நீங்கள் சென்னையில் இருந்து வந்தால், மதுரைக்கு வந்து அங்கிருந்து திருவண்ணாமலைக்கு ரயிலேற வேண்டும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    இந்த நகரத்தில் இருந்து 182 கி.மீ. தொலைவில் இருக்கும் சென்னை சர்வதேச விமானநிலையம் திருவண்ணாமலைக்கு அருகாமையில் இருக்கும் விமானநிலையம் ஆகும். நீங்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் வாடகை டேக்சி எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு வரலாம். விமான நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண கட்டணத்தில் பேருந்துகளை மாநில அரசாங்கம் இயக்கி வருகின்றது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed