3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்
சோழ மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம்.
மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.
கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இக்கோயில் மூலவர்கள் ஆவர்.
அறிவியலாளர்களாலேயே கண்டறிய முடியாத அந்த மர்ம முடிச்சுக்களை பற்றி காணலாம் வாங்க...
விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?
கருவறை விக்ரக மர்மம்
பூரி ஜெகநாத் கோயிலின் கருவறையில் மரத்தால் ஆன மூலவர் சிலைகள் உள்ளன. உலகிலேயே ஒரே கோயில் இதுதான்.
முழுமையடையா கடவுள் சிலைகள்
இதன் மூலவர் சிலைகள் முழுமையடையாம இருக்கு. இதன் பின்னாடியும் மர்மங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நவகளேபரா
12 வருசத்துக்கு ஒரு முறை நடைபெறும் நவகளேபரா திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய சிலைகள் செய்றாங்க..
கோபுரத்தின் நிழல்
இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்கமுடியாது.
பறவைகள்
இந்த கோயிலின் மேல் பறவைகள் எதும் பறப்பதில்லை. அதே நேரத்தில் இந்த கோபுரத்தில் எந்த பறவைகளும் அமர்வதுமில்லை.
சுதர்சன சக்கரம்
இந்த கோபுரத்தின் மேலுள்ள சக்கரம் எங்கிருந்து பார்த்தாலும், ஒரே மாதிரி தான் இருக்குமாம்.
கொடி
இதன் கொடி எப்போதும் காற்றை எதிர்த்து பறக்கிறது.
கோயிலில் கடலலை சத்தம் கேட்பதில்லை
கடற்கரை அருகில் இருக்கும் கோயிலின் உள் சென்றால் கடடலை கூட கேட்பதில்லை தெரியுமா?
மதிய சாப்பாட்டுக்கு வரும் விஷ்ணு
விஷ்ணு காலையில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு இங்கு வருவதாக நம்பிக்கை. அதனால் இங்கு விருந்து தடபுடலாக நடக்கும்.
ஆச்சர்யமளிக்கும் உணவு தயாரிப்பு
இவர்கள் உணவு பாத்திரங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து உணவு சமைக்கின்றனர். 5 அடுக்கு பாத்திரத்தில் அடியில் தீ வைத்தாலும், முதல் வேகும் உணவு என்னவோ முதல் பாத்திரத்தில்தான்.. அதாவது மேல் உள்ள பாத்திரம். இது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
துளியும் வீணாவதில்லை
எவ்வளவு சாப்பாடு செய்தாலும், துளியளவும் வீணாவதில்லை...
தங்கத்துடைப்பம்
தேர்த்திருவிழாவின் போது பூரி மன்னர் பரம்பரையினர் தங்கத் துடைப்பத்தைக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
புதிய புதிய தேர்கள்
புதிய புதிய தேர்கள் செய்துகொண்டே இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
புத்தர் கோயிலா?
புத்த கயாவுக்கும், இந்த கோயில் கோபுரத்துக்கும் என்ன வித்தியாசம் என்பது உங்களுக்கே எளிதில் விளங்கும். இதனால்தான் இது ஆரம்பத்தில் புத்த மடாலயமாக இருந்திருக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்தது.
இந்த ரியல் பேய்கள் பண்ணுற காமெடி என்னனு தெரியுமா? இங்க போங்க
பூரி கோயில் எங்குள்ளது
பூரி கோயில் எங்குள்ளது
பூரி கோயில் அருகாமையில்
பூரி கோயில் அருகாமையில்
கோனார்க்
கோனார்க் சூரிய கோயில் பூரி ஜெகநாத் கோயிலிலிருந்து வெறும் 1 மணி நேர தூரத்தில்தான் உள்ளது.
கோல்டன் பீச்
வெறும் 10 நிமிடங்களில் அருகிலுள்ள கோல்டன் பீச்சை அடையலாம்