வரலாற்று இடங்கள் பலவும் புதைந்து காணப்பட திரிபுராவின் வடகிழக்கு மாநிலத்தில் பெருமளவில் புதைந்து காணப்படுகிறது. இந்த அழகானது மதிப்புமிக்க இரத்தினமாக ஏழு தங்கை மாநில மத்தியில் காணப்பட, தொல்பொருள் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தளமாகவும் நாட்டில் புகழ்பெற்று விளங்குகிறது. செங்குத்தான சுவரானது இங்கே காணப்பட, வெட்ட வெளியாக காற்றையும் அது நமக்கு தந்திட, சுற்றுலா ஈர்ப்பாகவும் அது மாற்றத்துடன் காணப்படுகிறது.
இந்தியாவின் மூன்றாவது சிறிய மாநிலமாக திரிபுரா காணப்பட, எண்ணற்ற குறுகிய சந்துகளும், வழிகளும் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்கிட, இந்த சிறிய மாநிலத்தில் எண்ணற்ற அடிவார வீழ்ச்சிகளானது ஈர்ப்புடன் காணப்பட, அவை வருங்காலத்து தொல்பொருள் துறை இலக்காகவும் அமைந்திடக்கூடும். இந்த மாநிலத்தில் சில தளங்கள் காணப்பட, இவற்றுள் ஒன்று அல்லது பல இடங்களுக்கு செல்ல பயண திட்டம் தீட்டுவது சிறந்ததாகும்.
உனகொட்டி:
இவ்விடம் வரலாற்று யாத்ரீக இலக்காக அமைந்து காணப்பட, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதோடு, இவை 7 மற்றும் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திலோ அல்லது அதன் முன்னதாகவோ உருவாகியது என்றும் தெரியவருகிறது. இந்த தளமானது அழகிய பாறை சிற்பங்களை கொண்டிருக்க, சுவரோவியங்களும் மேலும் அழகினை சேர்த்திட, மாபெரும் ஈர்ப்பாக இது காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், இயற்கை அன்னையும் அழகிய காட்சிகளால் பரிசை நமக்கு அளித்திட, அவற்றுள் நீர்வீழ்ச்சியும், அழகிய மலைகளும் அடங்கும்.
இங்கே காணப்படும் உருவங்கள், பாறைகளை வெட்டி செதுக்கப்பட்டிருப்பதால், கல் உருவங்களாக அவை காணப்படுகிறது. இந்த பாறை வெட்டின் மத்தியில், சிவன் தலையும், கணேஷன் உருவமும் காணப்பட, சிறப்பு வரையறையாகவும் அது அமையக்கூடும். சிவபெருமானை ‘உனஜோதீஸ்வர கல் பைரவா' என்றும் அழைக்க, 30 அடி உயரத்தில் இது காணப்படுவதோடு, தலைக்கவசமானது 10 அடி உயரத்தில் காணப்படுகிறது.
PC: Shubham2712
உதய்ப்பூர்:
அகர்டாலாவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உதய்ப்பூர் காணப்பட, திரிபுர சுந்தரி ஆலயத்திற்கு இது பெயர் பெற்று விளங்குகிறது. இந்த சன்னதியானது நாடு முழுவதும் காணப்படும் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இவ்விடம், சக்தி தேவியின் பாதங்கள் சரிந்த இடமென்றும் நம்பப்படுகிறது.
இந்த ஆலயத்தை மஹாராஜ தன்யா மானிக்யா என்பவர் கி.பி.1501ஆம் ஆண்டு நிறுவியிருக்கிறார். இந்த ஆலயத்தின் தனித்தன்மையாக இரண்டு ஒரே மாதிரியான உருவங்களானது முக்கிய தெய்வத்தின் உள் சன்னதியில் காணப்படுகிறது. ஒரு சிலையின் உயரமானது 5 அடி காணப்பட, அதன் பெயர் திரிபுர சுந்தரி என்றும், மற்றுமோர் சிலையின் உயரமாக 2 அடி இருக்க அதனை ‘சோட்டிமா' என்றும் அழைக்கின்றனர்.
PC: Soman
நீர்மஹால்:
நீர் அரண்மனை என்றழைக்கப்படுவது தான் நீர் மஹாலாகும், இந்த மஹால், பீர் பிக்ரம் கிசோர் மானிக்ய பகதூர் என்பவரின் முன்னால் அரச இருப்பிடமாக திரிபுரா ராஜ்ஜியத்தில் காணப்பட்டு வந்தது. இந்த அரண்மனை, 1938ஆம் ஆண்டு ருத்ரசாகர் ஏரியின் இடையே கட்டப்பட, நாட்டில் காணப்படும் பெரிய வகை அரண்மனையும் இதுவாக இருக்கிறது. இந்த வகையான அரண்மனைகள் இரண்டே இரண்டு காணப்பட, மற்றுமோர் அரண்மனையாக ராஜஸ்தானின் ஜால் மஹால் காணப்படுகிறது.
இந்த அரண்மனை இரண்டு பாகங்களாக உள்ளடக்கி காணப்பட, மேற்கு பக்கத்தில் இருக்கும் அரண்மனையாக அந்தர் மஹாலும், கிழக்கு பக்கத்தில் காற்று வெளியிடை திரையரங்கமும் காணப்பட, கலாச்சார நிகழ்வுகள், நடனங்கள், நாடகங்கள் என அனைத்து அரசின் மற்றும் அனைவரது குடும்பத்தின் முன்னிலையில் அரங்கேறும்.
PC: Sumansaha123
பக்ஷாநகர்:
பக்ஷாநகர் தளமானது வனப்பகுதியை நீக்கிக்கொண்டு காணப்பட, இங்கே கட்டப்பட்ட செங்கல் அமைப்புகள் இடிபட்ட நிலையுடன் பரப்பை பங்களாதேஷ் எல்லையாக கொண்டு ஓரத்தில் காணப்படுகிறது. உள்ளூர் வாசிகளின்படி, மீதமிருக்கும் பகுதிகளில் பழங்காலத்து கோவில் காணப்பட அது மானசா என்கிற நாகதேவதைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நேரமானது சோதனைக்கு இரையாகிவிட, இந்தியாவின் தொல்பொருள் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு காணப்பட, அதன்பின் எடுத்துக்கொள்ளவும் பட்டது.
1997ஆம் ஆண்டு, புத்த சிலையானது தோண்டி எடுக்கப்பட, தொல்பொருள் ஆய்வாளர்கள் மூலமாகவும் அது புத்த ஆலயம் என உறுதிப்படுத்தப்பட்டது. மானசாவின் ஆலயம் அது அல்ல என்றும் கூறப்படுகிறது..
Offl Site