வழி: பன்ஷங்கரி - ரஜனக்குண்டே - தொட்டாப்பல்லப்புரா - மகலிதுர்கா
போக்குவரத்துக்கான வழிமுறைகள் - யெஷ்வந்த்பூரிலிருந்து இரயில் மூலம் காலை 7.30க்கு.
மற்ற போக்குவரத்து வழிமுறைகள்: KSRTC பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள்.
ஒட்டுமொத்தமாக பயணத்துக்கான நேரம் - 6 மணி நேரங்கள்.
சவுகரிய நிலை - மிதமானது முதல் கடினமாக வரை
பெங்களூருவின் அருகாமையில் காணப்படும் மகலித்துர்கா பயணம் என்பது உங்களுடைய விடுமுறைக்கான இடப்பட்டியலில் காணப்படக்கூடிய ஒன்றாகும். இங்கே காணப்படும் ஒற்றைக்கல் மலை, நாம் நினைப்பதுபோல் எளிதான ஒன்றல்ல. இந்த பயணத்துக்கான தூரமாக 8 கிலோமீட்டர் இருக்க., இருப்பினும் இதன் தன்மையானது மிதமாக தொடங்கி கடினமாக காட்சியளிக்க,பாறை நிலப்பரப்பும் சாய்வலான மலையை கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களுடைய சொந்த வாகனத்தில் பயணம் செய்தால், இந்த பயணத்தின் அடித்தளமாக இரயில்வே இட்ரக் பயணத்தை காணக்கூடும்.
பெங்களூருவின் பத்து சிறந்த கூடார தளங்கள்:
இப்பயணமானது இரயில்வே தண்டவாளத்தில் தொடங்குவதால் மகலிதுர்கா இரயில் நிலையத்தையும் நாம் அடைய வேண்டியதாக இருக்கிறது. அங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் நாம் நடந்து அடித்தளப்புள்ளியை நோக்கி செல்ல வேண்டும். விரைவில் அடித்தளத்தை தொட, நீங்கள் பழங்காலத்து ஆலயத்தின் குடியிருப்புகளையும் அடைய அங்கே கிருஷ்ண பெருமானையும் பார்க்க முடிகிறது. அங்கே கிராமப்புறத்து மக்களையும் அவர்களது கால் நடையையும் (Cattle) நம்மால் பார்க்கவும் முடிகிறது.
மகலிதுர்கா கோட்டையின் வரலாறு:
புராணங்களின்படி இக்கோட்டையானது விஜயநகர பேரரசால் கட்டப்பட்டதாக சொல்லப்பட, சிவாஜி அப்பாவான ஷஹாஜியால் கைப்பற்றப்படும் முன் இராணுவ பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின்னர், கெம்பிகௌடாவின் ஆட்சிக்கு கீழே வர, இவர் தான் பெங்களூருவை நிறுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோட்டையில் பழங்காலத்து ஆலயமும் காணப்பட, அவை சிவபெருமான் மற்றும் நந்திக்கோட்டைக்கு அர்ப்பணிக்கப்பட்டு மலை உச்சியிலும் காணப்படுகிறது.
பயணத்துக்கான பாதை:
இந்த பயணப்பாதை நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பயணமானது இரயில் பாதையில் ஆரம்பித்து ஓரிரு கிலோமீட்டர் செல்கிறது. அடுத்த விரிவாக கிருஷ்ண ஆலயம் முதல் சந்திப்பு வரை தொடர, பாறை நிலப்பரப்புகளும் காணப்படும். அடுத்ததாக மூன்றாவது விரிவு காணப்பட, பாறை மற்றும் மரங்கள் மத்தியில் நாம் ஏற, இந்த சரிவானது அவ்வளவு பயமாக இருப்பதில்லை என்றாலும், கண்டிப்பாக நமக்கு கவனம் என்பது தேவைப்படுகிறது. கடைசி விரிவாக கோட்டையை நாம் அடைய, அது விறுவிறுப்பான பயணமாகவும் அமையக்கூடும்.
இங்கே பாறைகளில் சாக்பீஸ் கோடுகளால் திசையானது குறிக்கப்பட, பயணம் செய்வோருக்கு அது கண்டுபிடிக்க எளிதாக அமையக்கூடும். இப்பகுதியில் க்ராணைட் பாறைகளும் காணப்பட, நமது கவனமானது வேறு பக்கம் காணக்கூடுமெனில் சறுக்கிவிடவும் வாய்ப்பானது காணப்படுகிறது. இந்த மலை உச்சியில் நின்று பெருமூச்செறிந்து நாம் பார்க்க, இடிபாடுகளில் சிக்கிய கோட்டை மற்றும் ஆலயங்களையும், அங்கே பழங்காலத்து குகைகளையும் நம்மால் பார்க்கவும் முடிகிறது. இங்கே வரும் நாம் காத்திருந்து அழகிய சூரியன் கதிர்களை சுறுக்கிக்கொண்டு மறைவதை மேலே ஏறி பார்த்து மனமகிழ்ந்திடலாம்.
இரவு பயணமானது இப்பகுதியில் காணப்பட, பயண ஆர்வலர்கள் பலரது தேர்வாக இரவானது அமைய, இவ்விடத்தின் அமைதியையும் நாம் உணர்ந்திடலாம். இவ்விடமானது அதீத வெப்பத்துடன் கோடைக்காலத்தில் காணப்பட, காலை 6 மணிக்கு முன்னரே பயணத்தை நீங்கள் தொடங்குவது நல்லதாகும்.
மகலிதுர்கா பயணத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்:
ஒவ்வொரு விரிவையும் கடந்து பயணத்தை முடிக்கும் நீங்கள் திரும்பிப்பார்க்க மறந்துவிடாதீர்கள் என சொல்லப்பட; அந்த காட்சிகள் ஒவ்வொரு கோணத்திலும் மாற்றத்துடன் காணப்படவும்கூடும்.
மேகமானது அழகாக உருவாக மத்தியில் தூய்மையான வானத்தையும் கொண்டிருக்க, அது நம் கண்களுக்கு விருந்தாக அமையக்கூடும். இந்த பாறை மற்றும் மண்ணின் அமைப்பானது இவ்விடத்தின் முழுமையை நமக்கு காட்டுகிறது.
இவ்விடத்தில் குரங்குகளின் தாவல் என்பது எளிதாக காணப்பட, இந்த மலையின் உச்சியிலிருந்து நாம் பார்ப்பதன் மூலம் தென் அமெரிக்க கண்டத்தையும் காண முடியும்.
மகலிதுர்கா பயணத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்:
புகைப்பட ஆர்வலருக்கான சொர்க்கமாக மகலிதுர்கா அமைய; மரங்களும், தூய்மையான வானமும் என பின்புலத்தில் காட்சி தருவதோடு, தன்னார்வத்தையும் சிறந்த முறையில் தூண்டவும்கூடும்.
குகைகளை ஆராய்வதோடு பாறை மீதும் நாம் ஏற, நீங்கள் ஒரு சாகச பிரியர் என்றால் அதனை சிறப்பாக கருதவும் கூடும்.
மலையின் உச்சியிலிருந்து சூரிய அஸ்தமனத்தை நாம் பார்த்து மன நிறைவையும் கொள்ளலாம்.
இங்கே நாம் ஏறும் வழியில் ஆண் மயிலையும், பெண் மயிலையும் காணவும் முடிகிறது.
நாம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்:
குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.
சொந்தமாக உணவு மற்றும் சிற்றுண்டிகளை எடுத்து செல்வதோடு, டொட்டாப்பல்லாபுரா வரை உணவகம் இல்லை என்பதையும் உணரவேண்டும்.
இரவுப்பயணம் செல்வோர் டார்ச் லைட்டை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும்.
கால நிலை எப்போது வேண்டுமானாலும் மாறிவிடலாம் என்பதால் மழைக்கோட்டு மற்றும் காற்று தேக்கியை எடுத்து செல்ல வேண்டும்.
மகலிதுர்காவில் உங்களுக்கு என்ன தான் கிடைக்கும்?
பிஸ்கட்கள், சாக்கலெட்டுகள், தண்ணீர் ஆகியவை இரயில் நிலையத்துக்கு அருகாமையில் நமக்கு கிடைக்கக்கூடும். பயணத்தின் அடிவாரத்தில் டெண்டர் தேங்காயும் கிடைக்க, இரண்டாவது விரிவில் அதன்பின்னர் கிடைக்கவும் கூடும்.
நாம் மறக்காமல் நினைவில் தேக்க வேண்டிய விஷயங்கள்:
நீங்கள் கொண்டு செல்லும் உணவுகளை குரங்குகள் பிடுங்கி திங்கக்கூடும் என்பதால், அதன் கண்களில் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
சவுகரியமான ஆடையையும், காலணிகளையும் அணிவதால் உங்கள் பயணத்தின் போதான அசவுகரிய நிலையை தவிர்த்திட முடியும்.
உடல் வறட்சி நிலையை தவிர்க்க தயவுசெய்து சொந்தமாக தண்ணீர் பாட்டில் எடுத்து செல்வது நல்லதாகும்.
கேமரா மற்றும் மற்ற பிற காட்ஜட்டுகளை நீங்கள் எடுத்து சென்றால், அவற்றை ஏறும்போது உடையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாக அமையக்கூடும்.
இந்த சாகசம் காண்பிக்கும் இலக்கை நோக்கிய பயணத்தை நீங்கள் திட்டமிடுவதோடு, இடிபாடுகளின் மத்தியில் சிக்கியிருக்கும் எண்ணற்ற அழகையும் காண இங்கே தான் வாருங்களேன்.