இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ?
படித்தவுடனே நெஞ்சம் பதைபதைக்கிறதா? உலக நாடுகள் அனைத்தும் தத்தமது வேலையை பார்த்துக்கொண்டிருக்க, அணு ஆயுத பிரச்னையால் பல நாடுகளிடையே பனிப்போர் தொடங்கியது.
அணுஆயுதம் தேவையில்லை என்று வெளியில் கூறிக்கொண்டாலும் , உள்ளுக்குள் தங்கள் நாட்டின் அணு ஆயுத பலத்தை பெருக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் எப்போது வேணாலும் சண்டை தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே எழுந்துள்ள போர் பதற்றம் விரைவில் உலகப் போர் வரும் எனும் அச்சத்தை ஊட்டுகிறது.
அதுமட்டுமல்லாது, கார்கில் போர், சுனாமி, உத்ரகண்ட் வெள்ளம், சொத்துக்குவிப்பு வழக்கு கைது முதலியவற்றை மிகச் சரியாக கணித்த சிவன்மலைக் கோயில், தற்போது கணித்துள்ளது உலக அழிவை...
பதற்றப்படாமல் முழுவதும் படியுங்கள்!
அறிவியலுக்கும் புலப்படாத மர்ம முடிச்சுகள் கொண்ட பூரி கோயில் போயிருக்கீங்களா?
எங்கே உள்ளது சிவன் மலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது சிவன் மலை. இந்த சிவன் மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில்.
அது என்ன உத்தரவு பெட்டி
இந்த கோயில் ஒரு கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் உத்தரவு பெட்டி. இதில் என்ன வைக்கப்பட்டுள்ளதோ அது தொடர்பான நல்லதோ, கெட்டதோ விரைவில் நடைபெறும்.
கனவில் வரும் முருகர்
இந்த கோயிலின் மூலவர் பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை கூறி வழிபடு என்று சொல்வாராம். அதன்படியே பக்தரும் கோயில் நிர்வாகிகளிடம் பேசி அந்த பொருளை பூசைக்கு வைத்து அந்த பெட்டியில் இடுவார்கள்.
சுனாமி
இதற்கு முன் ஒருமுறை இந்த பெட்டியில் உவர் நீர் வைத்து வழிபட்டனர். உள்ளூர் நபர் ஒருவருக்கு ஆண்டவர் கனவில் வந்து சொன்னதாக கூறப்பட்டது. அதன்பின்னர் சில நாட்களிலேயே சுனாமி ஏற்பட்டது.
கேதார்நாத் வெள்ளம்
பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
இரும்பு சங்கிலி
பின்னர் இரும்பு சங்கிலி வைத்து வழிபட்டனர் இந்த கோயிலின் பக்தர்கள். அந்த முறைதான் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகினர் சசிகலா சகாக்கள்.
உலக உருண்டை
இந்த முறை உலக உருண்டையை வைத்து பூசை செய்யச்சொல்லி ஆண்டவர் கட்டளையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலக உருண்டை ஒன்றை ஆண்டவர் உத்தரவு பெட்டிக்குள் வைத்தாகிவிட்டது.
உலகம் அழிகிறதா
இந்த நிலையில்தான், அமெரிக்க - வடகொரியா நாடுகளிடையேயான சண்டை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேயிருக்க, மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கலாம் என்ற பேச்சும் அடிபடிகிறது.
என்ன சொல்கிறார் சிவன்மலை சுவாமி
உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால் உலகம் சம்பந்தமான ஏதாவதொரு நல்லது அல்லது கெட்ட விசயம் நடக்கவாய்ப்பிருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் உலகப் போருக்கு இட்டுச் செல்லுமா இல்லையா என்பதுதான் ஐயம்.
ஹேவிளம்பிக்கும் உலக அழிவுக்கும் என்ன தொடர்பு
தற்போது நடக்கும் ஹேவிளம்பி ஆண்டுக்கு வேகுமே மேதினி தீ மேல் என பொருள்கொள்ளப்படுகிறது.
அப்படியானால் வேந்தர்கள் அநியாயம் புரிந்து நாட்டை அழிப்பர் என்று பொருளாம்.
எப்படி செல்வது
திருப்பூரிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த சிவன் மலை. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் முதலிய இடங்களிலிருந்தும் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை சுப்பிரமணியர் கோவில். சிவன் மலைக்கு வர காங்கேயம், சிவகிரி, காசிபாளையம், செட்டிப்பாளையம்,கொளத்துப்பாளையம் முதலிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இவையனைத்தும் சிவன் மலையிலிருந்து 15 கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளன.
PC: sivanmalaimurugan
ரயில் நிலையங்கள்
சிவன்மலைக்கு வரும் பக்தர்களுக்கு எளிதாக செல்லும் வகையில் ஏறக்குறைய 20 கிமீ தூரத்திற்குள்ளாகவே இந்த ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஊத்துக்குளி 18 கிமீ விஜயமங்கலம் 19.5கிமீ திருப்பூர் குளிப்பாளையம் 21.4 கிமீ
PC: Superfast1111
விமான நிலையம்
கோயம்பத்தூர் விமான நிலையம் 55 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது
PC: Julian Herzog
மேட்டுப்பாளையம்
சிவன்மலையிலிருந்து சுமார் 87 கிமீ தொலைவில் உள்ளது இந்த மேட்டுப்பாளையம். இது கோடைக்கு உகந்த சுற்றுலாத்தளமாகும்.
சிவன்மலையிலிருந்து 1.30 மணி நேரத்தில் மேட்டுப்பாளையத்தை அடையலாம்.
குன்னூர்
சிறந்த கோடை சுற்றுலாத் தளமான குன்னூர் சிவன் மலையிலிருந்து 121 கிமீ தூரத்தில் உள்ளது.. மேட்டுப்பாளையத்திலிருந்து 35 கிமா தொலைவில் உள்ளது இந்த குன்னூர்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
சிவன்மலைக்கு அருகில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
சிவன்மலைக்கு அருகில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன
சிவன்மலை முருகர் சிலை
சிவன்மலை முருகர் சிலை
கோயில் முகப்பு
சிவன்மலை முருகர் கோயில் முகப்பு
இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?