நமக்கு தெரியும். சூரியனின் ஒளி படும்போது ஒரு பொருளின் நிழல் எதிர் திசையில் விழும் என்பது.
நேரம் செல்ல செல்ல சூரியனின் திசை மாற மாற நிழலின் கோணமும் மாறுபடும் என்பதே அறிவியல்.
அறிவியலையே ஆட்டம் காண வைக்கும் ஒரு கோயில் தூண் நிழல், அசையாமல் இருப்பதுதான் ஆச்சர்யம்.
தூணின் நிழல் மர்மங்கள்
இந்த கோயிலின் தூண் மீது சூரிய ஒளி படும்போது, காலை எந்த கோணத்தில் இருந்ததோ, நேரம் செல்ல செல்லவும் அதே கோணத்தில் இருக்கின்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது நேர்க்கோட்டில் விழுகிறது.
நல்கொண்டா
இந்த கோயில் நல்கொண்டா நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த கோயில் கன்டூர் ,சோழர்களால் கட்டப்பட்டுள்ளது.
கோயில் தூண்கள்
இந்த கோயிலின் முன்புறத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. அதில் சூரிய ஒளி பட்டு நிழல் தரையின் மீது விழுவது வழக்கம்.
ஒளி இல்லை நிழல் உண்டு
இந்த கோயிலின் தூண்களில் இயற்கை ஒளி மட்டுமல்ல, செயற்கையான மின்ஒளி பட்டாலும் இதே இடத்தில் காட்சி தரும் நிழல் என்பதே மர்மத்துக்கு காரணம்.
நல்கொண்டாவிலிருந்து
இந்த கோயில் நல்கொண்டாவிலிருந்து , 4 கிமீ அருகில் உள்ளது. இது நாற்கோண வடிவில் அமைந்துள்ளது.
நிழல்களின் தெய்வம்
முழுவதும் நிழல்களாலே மறைக்கப்பட்டிருப்பதால், இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே அழைக்கப்படுகிறது.
நிழல் மர்மங்கள்
இந்த கோயிலின் நிழல் மர்மங்களுக்கான காரணம் என்ன தெரியுமா?
முடிவில்லை
இந்த கோயிலின் நிழல் மர்மத்துக்கான காரணம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் சில கூற்றுகள் இந்த கோயிலில் உள்ளன. அவை உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் வகையில் உள்ளன.
சூரியனால் கூட
சூரியன் இடம் மாறும்போதுகூட நிழல் இடம் மாறாதது மிகவும் மர்மமாக இருக்கிறது.
இயற்பியல் விதிகள்
இந்த தூண் மர்மங்கள் இயற்பியல் விதிகளுக்கு புறம்பாக உள்ளது. இதை உடைக்க பல அறிவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை முடியவில்லை.
கோயிலின் மகிமைகள்
இந்த கோயிலுக்கு வந்தால் திருமணத் தடை நீங்கும், திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னர் அந்த தூணில் நிழலே இல்லையாம்
அந்த தூணின் நான்கு புறமும் இருந்து ஒளி வந்ததால் தூணின் நிழல் தரையில் விழுந்ததே இல்லையாம்.
எப்படி செல்லலாம்
ஹைதராபாத்திலிருந்து எளிதில் சென்றடையலாம்.