சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து அறிவித்தது. இதையடுத்து 3 பேரும் சிறைக்குப் போகிறார்கள்.
இந்த சிறையைப் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா
பரப்பன அக்ரஹாரா
பெங்களூரு மத்திய சிறை அல்லது பரப்பன அக்ரகார சிறை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது
பெரியது
இந்த சிறைச்சாலைதான் கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய சிறை ஆகும்
தோற்றம்
1997 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை, 2000ஆம் ஆண்டு முதல் சிறைக் கைதிகளை அடைத்துவைக்க புழக்கத்திற்கு வந்தது.
அதற்கு முன்னர்
2000ஆம் ஆண்டிலிருந்து பெங்களூருவின் மத்திய சிறைச் சாலையாக பரப்பன அக்ரஹாரா அறிவிக்கப்படுவதற்கு முன் சுதந்திர பூங்காதான் சிறைச் சாலையாக இருந்தது
சுதந்திரப் பூங்கா
ஃப்ரீடம் பார்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பூங்கா பல வருடங்களாகவே சிறைச்சாலையாக நடத்தப்பட்டுவந்தது.
சுதந்திரத்துக்குப் போராடியவர்களை அதிகளவில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.
PC: Diham
பெயர் காரணம்
சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் அதிகளவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த இந்த சிறை சுதந்திர சிறை என்றும் சுதந்திர பூங்கா என்றும் அழைக்கப்பட்டது.
PC: Diham
பரப்பன அக்ரஹாராவின் பரப்பளவு
2016ம் ஆண்டின் கணக்குப்படி 40 ஆயிரம் ஏக்கர் அளவில் பரந்து விரிந்துள்ள இந்த சிறைச்சாலை, 4400 பேர் வரை வந்து செல்லும் இடமாக உள்ளது.
மொத்த கொள்ளளவு
4400 பேர் வரை வந்து செல்லும்படி அமைக்கப்பட்டிருந்தாலும், சுமார் 2200 பேர் மட்டுமே இச்சிறையில் அடைக்கப்படும் நிலையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வீரர்களின் உருவங்கள்
விடுதலைப் போராட்டவீரர்கள் அடைக்கப்பட்டிருந்ததன் நினைவாக அவர்களையொத்த உருவங்கள் அமைக்கப்பட்டுள்ள சிறை
PC: Diham
நுழைவு வாயில்
PC: Diham