Search
  • Follow NativePlanet
Share
» »பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா?

பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா?

பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா?

By Bala Karthik

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் தீர்த்தஹல்லி ஆகும். மேற்கு தொடர்ச்சியின் அடர்ந்த காடுகளை இது கொண்டிருக்க, கடல் மட்டத்திலிருந்து 591 மீட்டர் உயரத்திலும் இந்த தீர்த்தஹல்லி காணப்படுகிறது. இவ்விடமானது துங்கா நதிக்கரையிலும் அமைந்திருக்கிறது.

தீர்த்தஹல்லியை பரசுராம தீர்த்தம் அல்லது ராம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதன் புராணமாக, இவ்விடமானது சரியாக ஜமதக்னி துறவி தனது மகன் பரசுராமருக்கு ஆணையிட, தன் தாய் ரேனுகா தேவியின் தலை நோக்கி கோடாரியை கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

பரசுராமன் இக்காரியத்தை செய்ய, ஆனால் கோடாரியிலிருந்து வழிந்த குருதி போகவில்லை எனவும் தெரியவருகிறது. அவர் அனைத்து நதியிலும் கோடாரியை முக்கி எடுக்க, அந்த இரத்தக்கரை கொஞ்சமும் குறையவில்லை. அதனால், அவர் துங்கா நதிக்கரையில் அந்த கோடாரியை நனைக்க, இரத்தக்கறை மறைந்து போனதாம். அதனால், இவ்விடத்தை தீர்த்தஹல்லி என அழைக்கப்படுகிறது என புராணம் தெரிவிக்கிறது.

இவ்வாறு ஊள்ளூர் வாசிகளால் நம்பப்பட, தீர்த்தஹல்லியில் முக்கிய அந்த கோடாரியால் அனைத்து பாவங்களும் நீங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

 தீர்த்தஹல்லியை நாம் காண சிறந்த நேரங்கள்:

தீர்த்தஹல்லியை நாம் காண சிறந்த நேரங்கள்:

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் தீர்த்த ஹல்லியை காண ஏதுவாக அமைகிறது. மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில், கடும் வெயிலானது காணப்படக்கூடும். பருவமழைக்காலத்தில் இவ்விடமானது பார்க்க ஏதுவாக அமையவில்லை என்பதோடு, உங்களுடைய திட்டத்தில் மழையும் பங்களித்து பங்கம் விளைவித்திடக்கூடும்.

PC: Manjeshpv

தீர்த்தஹல்லியை நாம் அடைவது எப்படி?

தீர்த்தஹல்லியை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

தீர்த்தஹல்லிக்கு அருகாமையில் இருக்குமோர் விமான நிலையமாக 122 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மங்களூரு சர்வதேச விமான நிலையம் காணப்படுகிறது. ஷிமோகாவில் சொந்த விமான நிலையமானது காணப்பட, அது இன்று கட்டமைக்கப்பட்டு வரும் நிலையிலும் இருக்கிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

தீர்த்தஹல்லியின் அருகாமையிலிருக்கும் இரயில் நிலையமாக ஷிமோகா காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து ஷிமோகாவிற்கு தினமும் பல இரயில்கள் வந்த வண்ணம் இருந்துக்கொண்டிருக்கிறது. ஷிமோகா இரயில் நிலையத்திலிருந்து தீர்த்தஹல்லிக்கு 65 கிலோமீட்டர் ஆகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவிலிருந்து தீர்த்தஹல்லியை நாம் அடைய மொத்தம் மூன்று வழிகள் காணப்படுகிறது.


வழி 1: பெங்களூரு - குனிகல் - காடூர் - தீர்த்தஹல்லி வழி பெங்களூரு - ஹொன்னாவர் சாலை. பெங்களூருவிலிருந்து நம் பயணத்திற்கான அவகாசமாக 6 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. அதாவது ஒட்டுமொத்த தூரமாக 328 கிலோமீட்டர் காணப்படுகிறது.

வழி 2: பெங்களூரு - தும்கூர் - தரிக்கேரி - தீர்த்தஹல்லி வழி தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் மாநில நெடுஞ்சாலை 24. இவ்விடத்திற்கான ஒட்டுமொத்த தூரமாக 347 கிலோமீட்டர் இருக்க, 6 மணி நேரம் 48 நிமிடங்களும் ஆகிறது.

வழி 3: பெங்களூரு - மாண்டியா - சன்னராயப்பட்னா - காடூர் - தீர்த்தஹல்லி. இவ்வழியாக நாம் செல்ல பெங்களூரு - ஷிமோகா சாலை வழியாக அது அமைகிறது. பெங்களூருவிலிருந்து தீர்த்தஹல்லிக்கான தூரமாக 390 கிலோமீட்டர் காணப்பட, 8 மணி நேரப்பயணமாகவும் அமைகிறது.

முதலாம் வழி பரிந்துரைக்கப்பட, நேரமும், தூரமும் என நாம் கருதவேண்டியது அவசியமாகிறது. இவ்வழியில் சாலை சிறந்து காணப்படும் என்பதை ஒருபோதும் நாம் மறக்க வேண்டாம்.

பெங்களூரு முதல் தீர்த்தஹல்லி வழி குனிகல்:

பெங்களூரு முதல் தீர்த்தஹல்லி வழி குனிகல்:

பெங்களூருவிலிருந்து அதிகாலையில் நாம் புறப்பட, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து செல்லவும் முடிகிறது. இங்கே பல சிறு உணவகங்கள்/ தர்சினிக்கள் வழியில் காணப்பட, அவை அற்புதமான உணவு சேவையை தந்து பெங்களூருவில் காலை உணவை நிரப்பிக்கொள்ள நம்மை அழைக்கிறது.


அடுத்ததாக நாம் குனிகல் செல்ல, பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்விடம் காணப்படுகிறது. இந்த தூரத்தை கடந்து குனிகலை நாம் அடைய 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிறது. தும்கூர் மாவட்டத்தில் காணப்படும் குனிகல், குனிகல் எனப்படும் இங்கிருக்கும் ஏரிக்கு பெயர்பெற்று விளங்குகிறது.

இந்த ஏரியானது நம் நிமிடத்தை பொன்னான நேரமாக மாற்றிடும். குனிகல் இருமுனையாணி பண்ணை இங்கே புகழ்பெற்று விளங்க, குதிரையை விரும்புவோருக்கு இவ்விடம் சிறப்பாக அமையும். இவ்விடம் ஹைதர் அலியால் கட்டப்பட, குதிரை வகைகளை விஜய் மல்லையா குத்தகைக்கும் எடுத்துள்ளார்.

நரசிம்மா ஆலயம்:

நரசிம்மா ஆலயம்:

சோமேஷ்வர ஆலயம், வெங்கட ரமணா ஆலயம், நரசிம்மா ஆலயம், பத்மேஷ்வரா ஆலயம், சிவராமேஷ்வரா ஆலயம் என சில ஆலயங்கள் நாம் பார்க்க வேண்டியவையாக குனிகலில் அமைகிறது.

PC: Manjunath nikt

ஹுதுரிதுர்கா பெட்டா:

ஹுதுரிதுர்கா பெட்டா:


ஷிம்ஷா நதியில் கட்டப்பட்டிருக்கும் மர்கோனாஹல்லி அணை, பக்கத்து கிராமத்தின் பாசனத்திற்கு பயன்படுகிறது. ஹுதுரி பெட்டா என்பது வரலாற்றில் காணப்படும் ஈர்ப்பாகவும் அமைகிறது.

குனிகலிலிருந்து காடூருக்கான தூரமாக 149 கிலோமீட்டர் இருக்கிறது. இங்கே ஆலயங்களை தவிர்த்து நம்மால் எதனையும் காண முடியவும் இல்லை. தன்டிகேகளு ரங்க நாதசுவாமி ஆலயம், சன்னாகேசவா ஆலயம், கீச்சாகானா குடா ஆலயமென சில ஆலயங்களும் காடூரில் காணப்படுகிறது.

PC: Srinivasa S

திப்தூர்:

திப்தூர்:

இவ்வழியில் காணப்படும் திப்தூர் கர்நாடகாவின் தென்னை மையம் என அழைக்கப்படுகிறது. இவ்விடமானது தேங்காய் - காய்ந்தது, தூய்மையானது என பெயர்பெற்ற விளங்குகிறது. இந்த சமூகத்தின் முக்கிய பங்களிப்பாக தேங்காய் உற்பத்தியும் காணப்படுகிறது.

காடூரிலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தஹல்லி காணப்படுகிறது. தோராயமான கால அவகாசமாக 2 மணி நேரம் 22 நிமிடங்களும் தீர்த்தஹல்லியை நாம் அடைய தேவைப்படுகிறது.

இங்கே உள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் தீர்த்தஹல்லியின் இடங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

PC: Nandhinikandhasamy

 ஸ்ரீ ராமேஷ்வரா ஆலயம்:

ஸ்ரீ ராமேஷ்வரா ஆலயம்:

துங்கா நதிக்கரையில் காணப்படும் இந்த ஆலயம் பரசுராம கதையை ஒத்திருக்கிறது. ஸ்ரீ ராமேஷ்வரா ஆலயத்தின் அருகாமையில் பரசுராம தீர்த்தமும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிவ லிங்கமானது பரசுராமன் கடவுளுக்காக நிறுவப்பட்டதும் என சொல்லப்படுகிறது.

யெல்லு அமாவாசை நாளில் தீர்த்தஹல்லியில் பெரிதாக கொண்டாடப்படுகிறது இவ்விழா. இந்த நாளில் தான் துங்கா நதியில் பரசுராமர் தன் கோடாரியை சுத்தம் செய்ததாகவும், அந்த இரத்தக்கரைகள் மறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த நேரத்தில் விழாவும் இங்கே ஏற்பாடு செய்யப்படுகிறது.

PC: wikimedia.org

ருகவதே:

ருகவதே:

தீர்த்தஹல்லி தாலுக்காவின் ருகவதே இராமாயணத்தை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. இவ்விடம் தான் தன் மனைவியான சீதையின் வேண்டுகோளுக்கு இணங்க இராமனால் மான் கொல்லப்பட்டது என சொல்லப்படுகிறது. ருகா என்பதற்கு விலங்கு என பொருள் தர, வதை என்பது கொல்லப்படுவதை கன்னடா மொழியில் குறிக்கிறது. இவ்விடத்தின் பெயராக இலக்கிய ரீதியானது இதனால் காணப்படுவதை நாம் உணரலாம்.

PC: Manjeshpv

குப்பள்ளி:

குப்பள்ளி:

மகாகவி குவேம்பு பிறந்த இடமாக தீர்த்தஹல்லியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் குப்பள்ளி இருக்கிறது. இதன் நானாபித் விருதாக கவிஷைலாவும், கவிமானேவும் காணப்பட அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. அவருடைய குழந்தை பெயராக குப்பள்ளி என அழைக்கப்பட, அதனை அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. கவிஷைலா எனப்படும் இடமானது இங்கிலாந்தின் கற்களை ஒத்திருக்கிறது. இவ்விடத்தில் அவரின் ஆத்மா இன்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

PC: Krishna Kulkarni

ஆகும்பே:

ஆகும்பே:

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் ஆகும்பே, பல்லுயிர் கொண்டு காணப்படும் அழகிய இடமாகும். இதனை ஹசிரு ஹொனு (பசுமை தங்கம்) என அழைக்க, விலைமதிப்பில்லா மருத்துவ தாவரங்களான கார்சீனீயா, லிஸ்டே, யுஜினியா என பலவற்றையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. ஆகும்பே பயண பிரியர்களுக்கு பிடித்தமான இடமாகவும் அமைகிறது.

PC: Mylittlefinger

சிப்பலக்குட்டே:

சிப்பலக்குட்டே:

ஸ்ரீ சித்தி விநாயக ஆலயத்துக்கு புகழ்பெற்ற சிப்பலக்குட்டே, கணேஷ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. மீன்களும் பெருமளவில் இங்கே காணப்படுகிறது. குழந்தைகளுக்கு மகிழ்வான இடமாகவும் இது அமைகிறது. அதனால் நீங்கள் இங்குள்ள மீன்களுக்காக அரிசியை எடுத்து அதற்கு தீனியிடுவது நேரத்தை இனிமையானதாக மாற்றக்கூடும்.

PC: Manjeshpv

குன்டத்ரி:

குன்டத்ரி:

தீர்த்தஹல்லி மற்றும் ஆகும்பேவிற்கு இடையில் காணப்படும் குன்டத்ரி மலை அழகிய குட்டையையும், ஜெய்ன் ஆலயத்தையும் கொண்டிருக்க, குன்டகுன்டா ஆச்சாரியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. பர்ஷ்வந்தா எனப்படும் முன்னணி தெய்வமானது இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரையாகவும் அமைகிறது.

PC: Manjeshpv

காவேளிதுர்கா:

காவேளிதுர்கா:

தீர்த்தஹல்லியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டின் கோட்டைதான் சிறுக்குன்றின் மேல் காணப்படும் காவேளிதுர்காவாகும். இக்கோட்டை பதினான்காம் நூற்றாண்டின் செளுவரங்கப்பா என்பவரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இங்கே மலைமீது ஆலயம் காணப்பட அதனை ஸ்ரீ காந்தேஷ்வர ஆலயம் எனவும் அழைக்க, ஸ்ரீ காந்தேஷ்வராவுக்கு அது அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது.

PC: Manjeshpv

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X