திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக கேள்விப்படுவதும் அரிது. பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர்.
ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள் பிரதிபலிக்கின்றன. இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது. சரி வாருங்கள் திருவண்ணாமலை குறித்து தெரிந்து கொள்வதுடன், அதன் சுற்றுலா அம்சங்களையும் காண்போம்.
◑ திருவண்ணாமலையின் கார்த்திகை சிறப்பு
தமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள்.
இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது. அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.
◑ சுற்றுலாவும் திருவிழாக்களும்!
ஒவ்வொரு பௌர்னமி நாளன்றும் சிவபெருமானை வழிபடுவதற்காக பக்தர்கள் வெறும் காலோடு ஆணைமலை குன்றை சுற்றி நடக்கிறார்கள்.
14 கி.மீ. தூரம் வெறும் காலோடு நடந்து செல்வதன் மூலம், சிவபெருமான் மீது உள்ள தங்கள் பக்தியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தமிழ் நாள்காட்டியின் படி வருடாந்தர சித்ராபௌர்னமியின் போது உலகெங்கும் இருந்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துவதற்காக, பக்தர்கள் இவ்விடத்தில் குவிகின்றனர்.
இங்கு கொண்டாடப்படும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த பண்டிகை கார்த்திகை மகா தீபம். வட ஆற்காட்டிலும் இந்த பண்டிகை அதிக பக்தியோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகின்றது.
◑ ஆன்மீக சுற்றுலா பயணிகள்
5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருவண்ணாமலையில், திருவிழா காலத்தில் 86 பக்தகோடிகளின் சங்கமத்தை காணலாம். 2900 அடி உயரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது! மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பத்து நாட்களுக்கு விழா தொடர்ந்து நடைபெறுகின்றது.
◑ அமைதி நிலவும் பூமி
கார்த்திகை மகாதீபத்தின் போது திரளான பக்தகோடிகள் வருகை தந்தபோதிலும், இதுவரை இந்த பட்டணத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு சீர்கேடும் நடைபெற்றது இல்லை. அமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்! திருவண்ணாமலை ஒரு சிற்றூர். சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.
மக்கள் இசைவோடு வாழ்ந்து, தங்கள் தொழில்களை இயன்றவரை அமைதியாக செய்கின்றனர். இந்த பட்டணத்தை பெங்களூரோடு இணைக்கின்ற முக்கிய சாலைகளிலேயே இந்த நகரத்தின் தொழில் மையங்கள் இருக்கின்றன.
◑ எப்படி எப்போது செல்வது
இந்த நகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இருக்கின்றது. இந்நகருக்கு நெருக்கமான விமான நிலையம் சென்னை சர்வதேச விமானநிலையம் ஆகும். ஆனால், சாலை வழியாக பயணம் செய்வதே இந்த பட்டணத்தை அடைய சிறந்த வழி. உஷ்ணமான கோடை வெயிலையும், மிதமான மழைப்பொழிவையும், மென்மையான குளிர்காலத்தையும் இந்நகரம் பெற்று இருக்கிறது.
◑ திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்
➫ அருணாச்சலேஸ்வரா கோவில்
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப் பட்ட இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இங்குள்ள கோபுரம் மிகவும் சிறப்பானது.
➫ விருபாக்ஷா குகை
14ம் நூற்றாண்டு முதல் இந்த விருபாக்ஷா குகை மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
➫ ஆனைமலை தொடர்கள்
யானை போன்ற மலை என்பதைக் குறிக்கும்படியே ஆனை மலை என்று பெயர் வந்துள்ளது. இந்த மலையின் உயரமான சிகரம் ஆனைமுடி ஆகும். இதுவும் சுற்றுலாத் தளமாகும்.
➫ சாத்தனூர் அணை
தென்னிந்தியாவின் மிக முக்கிய அணைகளில் இதுவும் ஒன்றாகும்.