தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
படித்துப் பாருங்கள் : சோழர்கள் கட்டிய அற்புத கோயில்கள்!
இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா?
கஜுராஹோ - இது காமத்திற்கான கோயில்
ஆயிரமாண்டு அதிசயம்!!!
1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் எழில் கொஞ்சும் கம்பீரத் தோற்றம்.
படம் : Nara J
ஒற்றைக்கல் நந்தி!
பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த ஒற்றைக்கல் நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.
படம் : Hari Shankar05
சோழர் கால கல்வெட்டு
தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்.
படம் : Symphoney Symphoney
ராஜராஜன் சிலை
கோயிலுக்குள் காணப்படும் மாமன்னன் ராஜராஜனின் சிலை.
படம் : Venu62
சிவலிங்கங்கள்
பெரிய கோயிலைச் சுற்றி வரிசையாக அமையப்பெற்றுள்ள சிவலிங்கங்கள்.
படம் : Benjamín Preciado
ராஜராஜன் காலத்து நந்தி
மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட இந்த நந்தி, வராகி அம்மன் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நந்தி மண்டபத்தில் இருக்கும் ஒற்றைக்கல் நந்தி நாயக்கர்களால் உருவாக்கப்பட்டது.
படம் : Portvp
பிரம்மாண்ட சிவலிங்கம்
உலகின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் பெரிய கோயில் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காட்சி.
படம் : Vsvs2233
தஞ்சாவூர் ஓவியம்
நாயக்கர் காலங்களில் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவிய பாணியை பின்பற்றியே இப்போது பிரபலமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளது.
படம் : Ankushsamant
விநாயகர் சன்னதி
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் பின்னாட்களில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட விநாயகர் சன்னதி.
படம் : Bernard Gagnon
ராஜராஜனும், கருவூராரும்!
மாமன்னன் ராஜரானும், அவருடைய குரு கருவூரார் சித்தரும் உரையாடிக்கொண்டிருப்பது போல சோழர் காலத்தில் வரையப்பட்ட ஓவியம்.
படம் : Eugene a
கேரளாந்தகன் வாயில்
மாமன்னன் ராஜராஜன் கேரள நாட்டை கைப்பற்றியதின் காரணமாக கேரளாந்தகன் என பெயர்பெற்றதோடு, இந்த கேரளாந்தகன் வாயில் அதன் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.
படம் : Thamizhpparithi Maari
முருகன் கோயில்
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதி பின்னாட்களில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
படம் : Thamizhpparithi Maari
மேற்கூரை ஓவியங்கள்
கோயிலின் மேற்கூரைகளில் காணப்படும் ஓவியம் ஒன்று.
படம் : Thamizhpparithi Maari
நந்தி சிலைகள்
பெரிய கோயில் மதிற்சுவற்றின் மேலே அமையப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான நந்தி சிலைகள்.
படம் : Thamizhpparithi Maari
பாலபிஷேகம்
பெரிய கோயிலின் பிரம்மாண்ட சிவலங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது.
படம் : Shefali11011
கொடிமரம்
நந்தி மண்டபத்துக்கு முன்னாள் நிற்கக்கூடிய கொடிமரம்.
படம் : PRADHEEP J V
இரவின் விளக்கொளியில்!
கோயில் விமானமும், கலசமும் இரவு நேரத்தின் விளக்கொளியில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன.
படம் : Sri Ram
வரைபடம்
தஞ்சை பெரிய கோயிலின் அமைப்பை விளக்கும் வரைபடம்.
படம் : Junykwilfred
தூண்கள்
வரிசையாகவும், மிக அழகாகவும் காட்சியளிக்கும் பெரிய கோயிலின் தூண்கள்.
படம் : PRADHEEP J V
கும்பாபிஷேகம்
கோயில் கும்பாபிஷேகத்தின் போது 12 அடி உயரம் கொண்ட கலசத்தின் மீது ஏறி எவ்வாறு அபிஷேகம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் படம்.
படம் : Alagusenthil
அம்மன் சன்னதி
பிரகதீஸ்வரர் கோயிலில் நந்தி மண்டபத்துக்கு அருகே உள்ள அம்மன் சன்னதி.
படம் : Thamizhpparithi Maari
நடராஜர் சன்னதி
கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் அமைந்துள்ள நடராஜர் சன்னதி.
படம் : Thamizhpparithi Maari
சிவ சிவ!
நந்தி மண்டபத்தின் முன்னே சிவ சிவ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கும் தோற்றம். பின்னால் பிரம்மாண்டமாக கோயில் விமானம் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
படம் : Vinayaraj
படிக்கட்டுகள்
சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கும் சன்னதிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.
படம் : Aravindreddy.d
சோழர் கால ஓவியம்
சோழர் காலத்தில் வரையப்பட்ட நடன மங்கைகளின் ஓவியம்.
படம் : Venu62
பத்மா சுப்ரமண்யம் நாட்டியம்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவின்போது 1000 நடனக் கலைஞர்களுடன் நடனமாடிய காட்சி.
படம் : Portvp
கோயில் யானை
அலங்கரிக்கப்பட்டு அழைத்து கரைப்படும் கோயில் யானை.
படம் : Aruna
கருவூரார் சன்னதி
பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கருவூரார் சித்தரின் சன்னதி.
படம் : Junykwilfred
நடன அரங்கேற்றம் மற்றும் நடன நிகழ்ச்சிகள்
தஞ்சை பெரிய கோயிலில் அவ்வபோது நாட்டிய அரங்கேற்றமும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடப்பது வழக்கம்.
படம் : Arian Zwegers
நெய் தீபம்
கோயில் உள்ளே விற்கப்படும் நெய்தீபங்கள்.
படம் : vishwaant avk
ராஜராஜன் நாடகம்
தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அரங்கேற்றப்பட்ட ராஜராஜன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி.
படம் : Portvp
தட்சிணாமூர்த்தி சன்னதி
பெரிய கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி.
படம் : Junykwilfred
சேதமடைந்த சிலைகள்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் காணப்படும் சேதமடைந்த சிலைகள்.
படம் : Sivananthan2001
1000 ஆண்டு விழா தரை விரிப்பு
பெரிய கோயிலின் 1000 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது தரையில் அமைக்கப்பட்ட விரிப்புகள்.
படம் : Portvp
மரப்பல்லியும், நம்பிக்கையும்!
கருவூரார் சன்னதி பின்புறம் அமைந்துள்ள மரத்தில் வாழும் மரப்பல்லியை பார்த்தால் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
படம் : Portvp
சிவகங்கை பூங்கா
பெரிய கோயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகங்கை பூங்கா.
படம் : Ilasun
புது ஆறு
பெரிய கோயிலுக்கு அருகே பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் நீட்சி புது ஆற்றின் வெள்ளம்.
படம் : Ilasun
கருவூரார் சிலை
மாமன்னன் ராஜராஜனின் குருவாக கருதப்படும் கருவூரார் சித்தரின் சிலை. இவருடைய சன்னதி முன்பாக அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்வது வழக்கம்.
படம் : Thamizhpparithi Maari
அபிஷேக நீர்
சிவலிங்கத்துக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வழியும் இடம். இந்த நீரை பக்தர்கள் புனிதமாக கருதுவதுடன், கைகளால் தொட்டு தலையில் இட்டுக்கொள்வர்.
படம் : Thamizhpparithi Maari
பலிபீடம்
பெரிய கோயில் வளாகத்தில் காணப்படும் பலிபீடம்.
படம் : Thamizhpparithi Maari