கர்வால் பகுதியின் ஜௌன்சர் - பாவரில் காணப்படும் இவ்விடம், டேராடூனிலிருந்து தோராயமாக எழுபது கிலோமீட்டர் தொலைவில் காணப்பட இதனை விராட்கை என்றும் நாம் அழைக்கிறோம். இவ்விடமானது சிறந்த காட்சிகளை தரும் இடங்களுள் ஒன்றாக விளங்க, சரிசமமான சாகசத்தையும் கொண்டிருக்க, இயற்கை அழகு மற்றும் சாகசங்களை விரும்புவோருக்கு ஏற்ற இடமாக இது அமைகிறது. 1950 மீட்டர் உயரத்தில் இவ்விடம் காணப்பட, டேராடூன் மற்றும் முசோரி நகரங்களின் ஒட்டுமொத்த காட்சியானது இதன் ஒரு பக்கத்திலிருந்து நமக்கு புலப்பட, மற்றொரு பக்கத்தில் கம்பீரமான இமயமலை சிகரமும் தெரிகிறது.
விராட் ராஜா
விராட் ராஜாவின் பெயரால் இவ்விடத்திற்கு இப்பெயரானது கிடைக்க, அவர் பெயரோ மகாபாரதம் மூலமாக கிடைத்ததாகவும் தெரியவர, பாண்டவர்களின் பதிமூன்று ஆண்டு வனவாசத்திற்கு தங்க உதவிசெய்தவர் தான் விராட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய ராஜ்ஜியத்தில், அர்ஜுனன் பிரிஹனல்லா வேடம் பூண்டு வாழ்ந்து வந்ததாகவும், த்ரௌபதியிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்ற பீமனை கிச்சகா அப்போது கொன்றதாகவும் தெரியவருகிறது.
unknown
பாஞ்சாலியின் பாரம்பரியம்:
இங்கே காணப்படும் கிராமத்தில், தனித்துவமிக்க பாரம்பரியமானது கடைப்பிடிக்கப்பட்டுவர, அதனை உள்ளூர் வாசிகளால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியத்தின்படி, இக்குடும்பத்தின் சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமெனவும் சொல்லப்பட, பாண்டவ சகோதரர்கள் த்ரௌபதியை மணந்தது போலவே என்பதும் தெரியவருகிறது.
PC: Raja Ravi Varma
பாரம்பரியம்
மேலும், இப்பகுதியில் உள்ள மக்களால் இந்த பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வர, அவர்களுடைய குடும்பத்துக்கு இந்த பாரம்பரியமானது ஒற்றுவருவதன் மூலம் நியாயத்தையும் நிலை நாட்டுகின்றனர். இருப்பினும், இந்த பாரம்பரியமானது காலப்போக்கில் குறைந்துபோக, வழுவிழந்தும் காணப்பட; ஆனாலும், இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் சிலரை நம்மால் இங்கே பார்க்கவும் முடிகிறது.
Unknown
டேராடூன் மற்றும் முசோரியின் ஒட்டுமொத்த காட்சிப்பார்வை:
இங்கே வருவதன் மூலம் டேராடூன் மற்றும் முசோரியின் ஒட்டுமொத்த நகர காட்சியையும் நம்மால் வடகிழக்கு திசைகள் மூலம் தந்து உங்கள் உச்சி முதல் பாதம் வரையில் சிலிர்க்கவும் செய்கிறது. இந்த விராட்கை சிகரத்தின் உச்சத்தை அடையும் நாம், பனி மூடிய இமயமலை தொடர்ச்சியையும் காண, தௌலதார் சிகரத்திலிருந்து மேற்கு திசையில் காணப்படும் பந்தர்பூஞ்ச் வரை என, கேதார் சிகரம், சுமேரி, கிழக்கின் ஸ்வரரோஹினியையும் நம்மால் காண முடிகிறது.
PC: Paul Hamilton
கம்பீரமிக்க சிகரம்
இங்கே காணப்படும் கம்பீரமிக்க சிகரமானது, கலைஞர்களின் கற்பனையை தூண்டக்கூடிய காட்சிகளை நம் கண்களுக்கு தர, அந்த அழகை நம்மால் வார்த்தைகளால் ஒருபோதும் வருணிக்க இயலாது. அதோடு விரிவான சாலையின் காட்சிகளையும் ஆராயும் நம் கண்கள், அழகான இயற்கை காட்சிகளின் மூலமாக இன்றும், என்றும் தர, அவற்றை படம்பிடிக்க ஆசைக்கொள்கிறது நம் மனம்.
PC: Metanish
விராட்கையை நாம் காண சிறந்த நேரங்கள்:
இயற்கை அன்னையால் தரப்பட்ட அற்புதமான இயற்கை விருந்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விராட்கை காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் வருடம் முழுவதும் பார்க்கவும் முடிவதால், வருடமுழுவதும் இவ்விடமானது பல்வேறு சாயல் மற்றும் நிழலை கொண்டும் காணப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஒரு பனி விரும்பியாக இருந்தால், குளிர்காலத்தை நீங்கள் சிறந்து விரும்புவதோடு, அது ஒட்டுமொத்த மாறுதலுடனும் காணப்பட; பசுமையான நிழல் முதல் வெள்ளை மற்றும் க்ரீம் நிற சாயல் வரையிலும் எனவும் இவ்விடமானது காணப்படுகிறது.
எப்படி நாம் இவ்விடத்தை அடைவது?
ஆகாய மார்க்கமாக அடைவது:
டேராடூனின் ஜாலி க்ரான்ட் விமான நிலையம் தான் அருகில் காணப்படும் ஒரு விமான நிலையமாக இருக்க, 116 கிலோமீட்டர் தொலைவில் இவ்விமான நிலையம் காணப்படுகிறது. இவ்விமான நிலையம், தில்லியுடன் இணைக்கப்பட்டிருக்க, நாட்டின் இன்னும் சில விமான நிலையங்களும் காணப்படுகிறது.
இரயில் மார்க்கமாக அடைவது:
இங்கிருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் டேராடூன் இரயில் நிலையம் காணப்படுகிறது. இந்த நிலையம், முக்கிய நகரம் மற்றும் மாநிலம் முழுவதுமுள்ள நகர்புறங்களுடன் இணைந்து எண்ணற்ற இணைப்புகளுடன் நாடு முழுவதும் காணப்படுகிறது.
சாலை மார்க்கமாக அடைவது:
விராட்கையை நாம் அடைவதற்கு சிறந்த வழியாக சாலை போக்குவரத்து வசதியானது காணப்பட, வழக்கமான சாலை சேவைகளையும் முசோரி டேராடூன், தில்லியின் காஷ்மீரி கதவு, என மற்ற பிற நகரங்களுக்கும், மாநிலங்களின் நகர் புறங்களுக்கும் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து இணைந்திருங்கள்
நமது தளத்தில் விமானங்கள், ரயில்கள், கார்கள் மற்றும் ஹோட்டல்கள் எளிதில் புக்கிங் செய்து பயன்பெறுங்கள்.
இந்த முகவரியை சொடுக்குங்கள்https://tamil.nativeplanet.com/