குஜராத். நம் பாரத பிரதமர் மோடி அவர்களின் ஊர். நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, பல வளர்ச்சி உண்டானது. அது வெளிநாடுகளில் இருந்த நகரங்களுடன் போட்டி போடும் வகையில் குஜராத்தை மாற்றி அமைத்தார் மோடி என்று கூறப்பட்டது. பின்னாள்களில் அவை வெறும் போட்டோஷாப் எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படங்கள்தான் என்பது புரிந்தது. ஆனால், குஜராத் பயணித்தவர்களுக்கு அந்த மாநிலம் எப்படி இருக்கும் என்பது தெரிந்திருக்கும். நாம் நினைக்கும்படியாக அந்த மாநிலம் இல்லை. வாருங்கள் குஜராத்தின் அத்தனை இடங்களைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். கூடவே புகைப்படங்களையும் காண்போம். குஜராத் வளர்ந்துள்ளதா?
குஜராத் உங்களை அன்புடன் வரவேற்கிறது
ஜூனாகத்தை போன்று வேறுபாடு மிக்க இடங்கள் குஜராத்தில் மிக அரிது. கிர்நார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள
ஜூனாகத்திற்கு இந்த பெயர் இங்கு அமைந்துள்ள உபர்கொட் கோட்டையின் உபயத்தால் கிடைத்தது. இந்த உபர்கோட்
கோட்டையானது கி.மு. 320-ம் ஆண்டில் சந்திரகுப்த மெளரியரால் கட்டப்பட்டது.
நிலம்பாக் அரண்மனை
1859 ஆம் ஆண்டு, ஜெர்மேனிய கட்டிடக் கலை நிபுணரைக் கொண்டு கட்டப்பட்டது நிலம்பாக் அரண்மனை. ஜெர்மேனியரால்
கட்டப்பட்டிருந்தாலும், இந்திய கட்டிடக்கலையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கிறது இந்த அரண்மனை. தற்போது அரச
குடும்பத்தினர் இந்த அரண்மனையில் தான் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஐந்து நட்சத்திர தரத்தில் அமைந்திருக்கும் ஒரே
இடம் இந்த அரண்மனை தான்.
நல்சரோவர் பறவைகள் சரணாலயம்
இந்த பிரசித்தமான நல்சரோவர் பறவைகள் சரணாலயம் மத்திய ஐரோப்பாவிலிருந்து உணவையும் வெப்பத்தையும் தேடி வரும் புலம் பெயர் பறவைகளை அதிகமாக கொண்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்த விருந்தினர்கள் பட்டியலில் அடங்குகின்றன.
நவ்லோகா அரண்மனை
17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எழில்மிகு அரண்மனையான இது தான் கோண்டலின் பழமையான கட்டடம். இந்த பழமையான மாட மாளிகையில் செதுக்கப்பட்ட வளைவுகள், ஈர்க்கும் வகையில் மேல் மாடங்கள், முற்றங்கள் மற்றும் அழகிய சுழல் படிக்கட்டுகளை காணலாம்.
Bernard Gagnon
நவ்லோகா அரண்மனை உள்ளே
நவ்லோகா அரண்மனைக்குள் சென்றிருக்கிறீர்களா?
சோமேஸ்வரன் கோவில்
சோமேஸ்வரன் கோவில்
சூரிய கோவில்
சூரிய கோவில்
சூர்ய குந்த்
சூர்ய குந்த்
குஜராத் வயல்வெளிகள்
குஜராத் வயல்வெளிகள்
ரான் ஆப் கட்ச்
ரான் ஆப் கட்ச்
அழகிய குஜராத்
பூத்துக் குலுங்கும் அழகிய மலர்கள் இவை
கடனா நதி பாயும் அணை
கடனா நதி பாயும் இடத்தில் கட்டப்பட்டுள்ள அழகிய அணை
அணைக்கு செல்லும் நீரின் அழகு
அணைக்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட நீரின் அழகு புகைப்படம்
கடனா நதிக்கு அருகில்
கடனா நதிக்கு அருகே எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் இது.
பாவபைரா குகைகள்
பாவ பைரா எனப்படும் குகைகளின் தொகுப்பு
புத்தர் குகைகள்
புத்தமத குகைகள் உபர்கோட்டின் உள்ளே காணப்படுகின்றன. இந்த புத்தமத துறவிகளுக்கான உறைவிடமாக திகழ்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த குகைக்கு சுமார் 1500 வயது இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த குகைகளின் சுவர்கள் சிற்பங்கள் மற்றும் மலர் படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கம்பலிடா குகைகள்
நம் நாட்டிலுள்ள வேறு பல குகைகளைப் போலவே இந்த குகைகளும் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகவே உள்ளன. ராஜ்கோட்டில் உள்ள கோண்டல் பகுதிக்கு அருகில் உள்ள இந்த மூன்று குகைளில், மத்தியில் உள்ள குகைளில் 'சைத்யா' என்ற ஸ்தூபியும் உள்ளது. சுண்ணாம்புப் பாறைகளில் குடையப்பட்டுள்ள இந்த குகைகள் கி.பி.4 அல்லது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும்.
தலாஜா குகைகள்
ஷத்ருனாய் மற்றும் தாளாஜி ஆறுகள் ஓடும் மலை உச்சியில் அமைந்திருக்கும் நகரம் தளாஜி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மலைகளைக் குடைந்து பௌத்த மடாலயங்கள் அமைத்திருக்கின்றனர். மலையில் அமைந்திருக்கும் கோவில்களையும் மடாலயங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வருகின்றனர்.
ரான் ஆப் கட்ச் நெடுஞ்சாலை
ரான் ஆப் கட்ச் வழியாக செல்லும் நெடுஞ்சாலை
ரான் ஆப் கட்ச் ஒட்டகம்
ரான் ஆப் கட்ச்சில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் ஒட்டகம்
ஜைனாபாத் ஏரி
ஜைனாபாத் ஏரியில் அழகாக காட்சி தரும் பறவை
விமானம்
ரான் ஆப் கட்ச் பகுதியில் பறக்கும் விமானம்
சூரிய மறைவு
ரான் ஆப் கட்ச்சின் அழகிய சூரிய மறைவு காட்சி
கடலும் வானமும்
கடலும் வானமும் சேரும் இடத்தில் பொறாமையில் பொங்கிய மலை
கிரா நீர்வீழ்ச்சி
பச்சை சூழ்ந்த அழகிய நீர்வீழ்ச்சி
புஜ் நகரில் பார்க்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏராளமானவை உள்ளன. ஷரத் பௌக் அரண்மனை, 1991 ஆம் வருடத்தில், கட்ச் பகுதியின் கடைசி மன்னரான மதன்சிங் இறக்கும் வரை, மன்னரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. அயினா மஹால் என்றழைக்கப்படும் கண்ணாடிக் கூடம், லக்பத்ஜி மன்னரின் ஆட்சிக்காலத்தின் போது தேர்ந்த கைவினைக் கலைஞரான ராம்சிங் மாலம் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. பிரக்மால்ஜி மன்னரால் இத்தாலிய கோத்திக் பாணியைத் தழுவி கட்டப்பட்டுள்ள ப்ரக் மஹாலின் மணி மண்டபம் கட்டாயம் காண வேண்டிய ஒன்று. இராமாயண கதாப்பாத்திரங்களின் சிலை வடிவங்களைக் கொண்டிருக்கும் ராமகந்த் படிக்கிணறு மற்றும் சதார்டிஸ் என்றழைக்கப்படும் அரச கோபுரங்கள் ஆகியவையும் காணப்படுகிறது. இவை தவிர, 2000 வருட பழமை வாய்ந்த க்ஷத்ரபா குறிப்புகள் உள்ள கட்ச் அருங்காட்சியகம் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து புராதன கட்டிடங்களையும் அதன் பக்கவாட்டில் கொண்டுள்ள ஹமீர்ஸர் ஏரி ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள சுவாமி நாராயண் கோயிலில், கிருஷ்ண பகவான் மற்றும் ராதை ஆகியோரின் கதைகளை சித்தரிக்கும் கண்கவர் மரச்சிற்பங்கள் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன.