கிழக்கு ஹரியானாவில் அமைந்துள்ள இந்த வன விலங்கு சரணாலயம் சண்டிகரில் இருந்து சுமார் 126 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த பகுதி மிகப் பிரபலமான கலெஸர் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது. டிசம்பர் 2003 இல் இந்திய அரசாங்கம் இந்த வனப் பகுதியை ஒரு தேசிய பூங்காவாக அறிவித்தது. அடிப்படையில் ஒரு சால் காடான இந்த தேசிய பூங்கா இமயமலை அடிவாரத்தில் உள்ள ஷிவாலிக் ஹில்ஸை சேர்ந்தது.
சுமார் 11000 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கலெஸர் தேசிய பூங்காவின் உயரம் 2000 அடியில் இருந்து 3,500 அடி வரை மாறுபடுகிறது. கலெஸர் தேசிய பூங்காவானது பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக உள்ளதால், இங்கு வரும் இயற்கை ஆர்வலர்களான சுற்றுலா பயணிகளூக்கு ஒரு உன்னத அனுபவத்தை வழங்குகிறது. இங்கு காட்டு பன்றிகள், சம்பார், முயல்கள், சிகப்பு காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, ச்ஹிதால் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு வன விலங்குகளைத் தவிர க்ஹரி, சால், ஸ்ஹிஸ்ஹம், ஸைன், ஜ்ஹின்கான் போன்ற தாவரங்கள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன. இந்த தேசியப் பூங்கா சிந்தூர் மரங்களுக்கு மிகப் பிரபலமானது. இந்தப் பூங்காவானது அதன் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை தவிர்த்து, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கண்ணுக்கினிய இயற்கை காட்சிகளை விருந்தாக வழங்குகிறது.
இந்தப் பூங்கா வளாகத்தில் பிரிட்டிஷ் காலனி காலத்தை சேர்ந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான பங்களா ஒன்று உள்ளது. பார்வையாளர்கள் இந்த தேசிய பூங்காவில் உள்ள வன விருந்தினர் வீட்டில் இருந்து யமுனா நதியின் அழகிய பார்வையை பெற முடியும். இந்த பங்களா அழகான தோட்டங்கள் மத்தியில் உள்ளது. மேலும் இந்த பங்களாவானது உயர்ந்த கூரை, தேக்கு மரப் பலகைகளால் செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகள், மற்றும் அழகு வேலைப்பாடு அமைந்த தரை விரிப்புகளையும் பெற்றுள்ளது. இதைத் தவிர இங்கு ஒரு வசதியான நெருப்பிடம் மற்றும் பழங்கால மேஜை மற்றும் நாற்காலிகளையும் காணலாம். இந்த கலெஸர் தேசிய பூங்காவின் வெவ்வேறு பகுதிகளி எட்டு தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகள், இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் தேடி வெளியேறிவிடாமல் பாதுகாக்கிறது.
முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகள்
ஹிந்தி, பஞ்சாபி மற்றும் பாங்ரு மொழிகள் யமுனா நகரில் பெருவாரியாக பேசப்படுகின்றன. இந்த நகரம் ஹரியானா மாநிலம் முழுவதற்கும் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளில் முன்னணியில் திகழ்கிறது. மேலும் யமுனா நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. இங்கு புனித தலங்களான பல்வேறு கோயில்கள் மற்றும் குருத்துவாராக்கள் அமையப்பெற்றிருக்கின்றன. யமுனாநகர் முழுவதும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்து உள்ளன. இந்த நகரம் சீன பெரு நிலத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கு தொழில்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து குடியேறியவர்களால் இந்த நகரம் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் காரணமாக இந்த நகரத்தின் கலாச்சார பன்முகத்தன்மையும், யமுனா நகரின் கிராமப் பகுதிகளின் முகமும் கூட மாறி விட்டது. இந்த மக்களின் மிக முக்கியமான தொழிலாக வர்த்தகம் அறியப்படுகிறது. சர்க்கரை, காகிதம் மற்றும் பெட்ரோலிய உப பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இங்கு அனல் மின் நிலையத்தை தொடங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வே வேகன் மற்றும் கோச்களின் பழுது பட்டறைகள் இங்கு அமைந்துள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய காகித மற்றும் சர்க்கரை ஆலை மற்றும் மரத் தொழில் ஆகியவை இவ்விடத்தின் முக்கியத்துவத்துக்கு காரணம். விவசாயமும் இங்கு நடைமுறையில் உள்ளது. இங்குள்ள செழுமையான நீர் வளம் மற்றும் வளமான மண் போன்றவை கரும்பு, நெல், கோதுமை மற்றும் பூண்டு சாகுபடிக்கு உதவுகிறது. பொப்லர் மற்றும் யூக்கலிப்டஸ் போன்ற விவசாயக் காடுகள் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானத்தை தருகின்றன.
யமுனா நகருக்கு சுற்றுலா வருவதற்கு சிறந்த பருவம்
அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலகட்டமே யமுனா நகரை சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த பருவமாகும்.
யமுனா நகரை எவ்வாறு அடைவது?
யமுனா நகர் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகருக்கு அருகில் சண்டிகர் விமான நிலையம் உள்ளது.