மும்பை நகரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அரேபியக்கடலில் உள்ள சிறு தீவான எளிபென்ட்டா தீவில் உள்ளது எளிபென்ட்டா குகை. இந்திய குடைவரை சிற்ப்பக் கலையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இது மேலோட்டமாக பார்க்கையில் களிமண்ணினால் செய்யப்பட்டதைப் போல தோற்றமளிக்கும். ஆனால், முழுவதும் பாறைகளால் வடிவமைக்கப்பட்ட இக்குகையின் உள்ளே பல்வேறு மர்மங்கள் அடங்கிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் சைவக் கடவுளான சிவபெருமானையே சூழ்ந்துள்ளதால் இன்று வரை விடைதெரியா மர்மமாகவே அது நீள்கிறது.
குகைத் தோற்றம்
கி.பி 5-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 8-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இக்குகையின் உள்ளே உள்ள சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லிவயல் துறையினரால் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை யார் கட்டினார்கள் என்பதற்கு இன்றும் மர்மமாகவ உள்ளது.
கிரஹ புரி
இக்குகை முதலில் கிரஹ புரி என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் வழிபாட்டு தலமாகவும் 16-ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், 1534-யில் போர்த்துகீசியர் மன்னரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்த பிறகு அவை வழக்கொழிந்து போய் இருக்கின்றன.
சிவன் தொழில்
எளிபென்ட்டா குகையில் பல்வேறு சிற்பங்கள் காணப்பட்டாலும், 20 அடி உயரம் கொண்ட சிவனின் சிலை சற்று வியப்படைய வைக்கிறது. அதாவது, அச்சிலை சிவ தொழிலாளான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களான விளக்கும் விதமாக 3 முகங்களுடன் உள்ளன.
சிவா குகை
89 அடி அகலமுள்ள இக்குகையினுள் 10 விதமான சிவனைப்பற்றிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நுழைவு வாயிலில் மகேசமுர்த்தி சிற்பம் இருக்கிறது. இந்த குகையை கல்லால் ஆனா பெரும் துண்கள் தாங்கி நிற்கின்றன. இதனுள் சிவனையும், சக்தியையும் குறிக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், சிவன் பூமிக்கு கங்கையை கொண்டு வந்ததை சித்தரிக்கும் கங்காதரர் சிற்பம் போன்றவை உள்ளன. இக்குகையில் சாளுக்கியர் கால கட்டிடக்கலையின் வழக்கமான சதுர வடிவ தூண்கள், பிரமாண்டமான கடவுள்கள் மற்றும் துவார பாலகர்கள் சிலையும், குப்தர்களின் கட்டிடக்கலை மரபில் பின்பற்றப்பட்ட மலைகள், மேகங்கள் பற்றிய சித்தரிப்புகள் போன்றவை கலந்துள்ளன.
திருமூர்த்தி சிற்பம்
இந்த எளிபென்ட்டா குகை சிற்பங்களில் மிகச்சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுவது சிவகுகையின் வாயிலுக்கு பின்னே இருக்கும் திருமூர்த்தி சிற்பம். திருமூர்த்தி சிற்பம் உட்பட இங்குள்ள அனைத்து சிற்பங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததாகவும் காலப்போக்கில் அவை அழிந்து பொய் இருக்கின்றன.
எப்படிச் செல்வது ?
எளிபென்ட்டா தீவை படகு மூலம் மட்டுமே அடைய முடியும். மும்பை, Gate Way of India-வில் இருந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தீவுக்கு முதல் படகு சவாரி உள்ளது. இந்தியாவின் எல்லா நகரங்களில் இருந்தும் மும்பைக்கு ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் போக்குவரத்து சேவைகள் உள்ளன.
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்
அழகிய எலிபாண்ட்டா தீவுகளும் குகைகளும்