இந்தியாவில் மத வரலாற்றை பெருமளவில் கொண்டு வேறுபட்டு, எண்ணற்ற மதமான இந்து, புத்த, ஜெய்ன் மற்றும் சீக்கிய மதத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. இத்தகைய காரணத்தால், நம் நாடு குறிப்பிட்ட டிகிரி மத சகிப்புத்தன்மையையும் காட்சி பொருளாக பாவிக்க, நாட்டின் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக விளங்க; ஒவ்வொரு குடிமகனும் இந்த வேறுபாட்டினால் பெருமையும் கொள்கிறான்.
புனிதமான இலக்குகளையும் உடல்கூறு உலகத்தால் சங்கமிக்க, ஆன்மீகமும் ஒன்றாக அதற்கு அமைந்திட, இது ஒருவனுடைய இதயத்தை ஆன்மீக ஆர்வம் மற்றும் புனிதத்துவத்துடன் போற்றிடுகிறது. இந்த ஆன்மீக இலக்கானது அதீத அழகையும், சுவாரஸ்யமான தளத்தையும் கொண்டிருக்க, பல மத கட்டிடக்கலைகளும், புனித கலைகளும், ஆன்மீகத்தின் எல்லையில் நம்மை தொட்டு செல்கிறது.
யாத்ரீகத்துக்கு அற்புதமான தனித்துவமிக்க இலக்காக இந்தியா விளங்க, ஆன்மீகமானதும் அதீதமாக இலக்கை நிர்ணயிக்க, தனிமனிதன் தன் பாவத்தை நீக்கி, பக்தியின் சக்தியையும் இந்த நிலையில் உணர்கிறான்.
சௌசாத் யோகினி ஆலயம், மத்திய பிரதேசம்:
சாம்பல் பள்ளத்தாக்கின் உள்ளே மொரேனா காணப்பட, சௌசாத் யோகினி அரிதான சகிப்புத்தன்மைக்கொண்ட அமைப்புகளுள் ஒன்றாகவும் நம்பப்பட, 64 யோகினிகளான துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் கட்டிடம் உள்ளே, 64 அறைகள் காணப்பட, இதனை கடந்து மையத்தின் கருவறையும், விரிவான பல்வேறு தெய்வங்களும் செதுக்கப்பட்டிருக்கிறது.
தாந்த்ரீகா நம்பிக்கை மற்றும் பயிற்சிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது யோகினி ஆலயங்கள். இதனை இந்திய பாராளமன்ற கட்டிடத்தில் காணப்படும் அமைப்புகளின் கோடுகள் போல் கட்டப்பட்டிருக்க, இது பார்வையாளர்கள் மத்தியில் மாய அழகையும் தோற்றுவிக்கிறது.
PC: Akrati123
சர்கேஜ் ரோஷா, குஜராத்:
அஹமதாபாத் புறநகர் பகுதியில் காணப்படும் சர்கேஜ் ரோஷா, சைக் அஹமத் கட்டு காஞ்ச் பக்ஷ் என்பவருடைய கல்லறையாக விளங்க, இவர் தான் ஸுபி துறவியெனவும், முதலாம் அஹமத் ஷாவிற்கு ஆலோசனையாளர் என்பதும் தெரியவருகிறது. இங்கே துறவிகள் இசைக்கருவியை வாசிக்க, அது அஹமதாபாத்தின் உருவாக்கத்திற்கு முக்கிய அங்கமாகவும் விளங்கியதாம்.
இந்த கல்லறையை தவிர, மசூதிகள், நூலகங்கள், இடிபட்ட பழமையான அரண்மனைகள், கலாச்சார மையங்கள் என பலவற்றிற்கு வீடாகவும் விளங்கியது. இந்த மசூதியானது இந்தோ-சர்கானிக் கட்டமைப்பு பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க, மாபெரும் பின்னல் பணிகளை இந்திய மற்றும் ஜெய்ன் ஆதிக்கத்தையும் கொண்டு காணப்படுகிறது.
PC: Mayuri hedau
தைத்யா சூடான் ஆலயம், மகாராஷ்டிரா:
லோனாரில் காணப்படும் தைத்யா சூடான் ஆலயம், ஆறு மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டதாகும். இதற்கு பல புராணங்கள் இந்த ஆலயத்தின் ஆதிப்புள்ளியாக காணப்பட; அவற்றுள் ஒன்று, லவனசுரா என்னும் அரக்கனால் இங்கே கிராமத்தில் இருப்பவர்கள் தொல்லை அனுபவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் விஷ்ணு பெருமான் தைத்யா சூடான் வடிவம் பூண்டு, போரின் மூலம் அந்த அசூரனை அழிக்க, அவன் உருவ பலத்தால் பூமியில் புதைப்பதற்கும் கடினமாக இருக்க, மாபெரும் பள்ளமானது இங்கே விழுந்தது எனவும் சொல்லப்படுகிறது.
PC: Bharill
ஹோலி கிராஸ் தேவாலயம், தமிழ்நாடு:
மதுரையின் ஆலய நகரத்திலிருந்து நான்கு மணி நேரங்கள் ஆக, மணப்பாடின் மீனவர் குக்கிராமமானதும் காணப்பட, பெயர் பெற்ற நீர் விளையாட்டுகளின் இலக்காகவும் இது அமைகிறது. இருப்பினும், வளர்ச்சிக்கு முன்னால், இந்த குக்கிராமம் காணப்படும் இடம், கிருஸ்துவ முக்கிய துவம் கொண்டு விளங்கியது. ஹோலி கிராஸ் எனப்படும் தேவாலயமானது வெள்ளை நிற வண்ணமானதை உயரத்தில் பூசப்பட்டிருக்க, இதன் பின்புலத்தில் நீல வானமும், அழகிய உருவை உருவாக்கி நம் மனதை காட்சிகளால் கவர்கிறது.
1540ஆம் ஆண்டில், போர்த்துக்கீசிய கப்பலானது கிழக்கு வழியில், ஒரு அபாயகரமான புயல் மணப்பாடின் அருகாமையில் ஏற்பட்டதால் மாட்டிக்கொண்டது. அந்த கப்பலின் தலைவர் பாதுகாப்பின் நலன் கருதி கடவுளை பிரார்த்திக்க புயல் அடிக்கப்பட்ட பின்னர், பாதிப்பற்று கப்பல் கரையையும் அடைந்தது. இதனால் நன்றி சொன்ன அவர், க்ராஸ் குறியீட்டைக்கொண்ட அசல் மாஸ்டை கப்பலின் குன்றின் மேல் வைத்திட, இதன் கவனம் சைன்ட் பிரான்சிஸ் சேவியரை சென்று சேர, அந்த குக்கிராமத்திலுள்ள அவருடைய வீட்டிலே, கிராமத்தின் புனித புரவலராக தீர்மானித்தும் கொண்டாராம்
ஆனந்த்பூர் ஷாகிப், பஞ்சாப்:
கல்ஷாவின் பிறப்பிடமான ஆனந்த்பூர் ஷாகிப், நிகாங்க்ஷின் மாபெரும் முகாமாக இருப்பிடம் காண, நீல நிற கயிர்க்கொண்ட சீக்கிய போர் வீரனாகவும் இருந்தார். சீக்கியர்களின் ஒன்பதாவது குரு, தெஹ் பஹதூர் என்பவரால் 1665ஆம் ஆண்டு நிறுவப்பட, இந்த குக்கிராமமானது எண்ணற்ற குருத்வாராக்களை கொண்டிருக்க, மத்தியில் கேஷ்கார்ஹ் ஷாகிப்பையும் கொண்டு, ஐந்து மத இருக்கைகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்த மாபெரும் குருத்வராக்கள் பல்வேறு நினைவு சின்னமான குரு கோபிந்த் சிங்கையும் உள்ளடக்கி இருக்க, அவருடைய தனிப்பட்ட குத்துவாள், என பலவும் காணப்படுகிறது. மற்ற ஆலயத்தை காட்டிலும், கேஷ்கார்ஹ் ஷாகிப் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டிருக்க, பக்தர்களும் ஆன்மீக பாடலை பாடியபடி பக்தியில் மூழ்க, பல்வேறு ஆன்மீக செயல்களையும் சேர்த்தே கொண்டிருக்கிறது.
PC: Deziner89
நம்ட்ரோலிங்க் மடாலயம், கர்நாடகா:
நம் நாட்டின் பெரும்பாலான திபெத்திய குடியிருப்புகள், இமாச்சல பிரதேசத்திலும், சிக்கிமிலும் காணப்படுகிறது. இருப்பினும், தென்னிந்தியாவின் முக்கிய குடியிருப்பாக, கர்நாடகாவின் பைலக்குப்பே இருக்கிறது. இங்கே, வருபவர்களால் அழகிய மடாலயத்தை பார்க்க முடிய, மாபெரும் ஈர்ப்பாக இரண்டாவது பெரிய திபெத்திய குடியிருப்பையும் நம் நாட்டில் கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த நகரத்திலும் இது மேலாக உயர்ந்து நிற்க, அமைதியான சரணாலயத்தையும், எண்ணற்ற யாத்ரீக தளத்தையும் கொண்டிருக்க, தங்காங்க ஓவியங்களும், திரைச்சீலைகளும் நிரம்பி வழிகிறது. இதன் கருவறையில், மூன்று தங்க சிலைகள் புத்த மதத்திற்காக காணப்பட, அத்துடன் இணைந்து பத்மசம்பவா மற்றும் அமித்தாயுவும் காணப்படுகிறது.
PC: Manojz Kumar