ஏகாதசி நாளைக் கொண்டாடுபவர்களுக்கு ஒரு ஆச்சர்யமான உண்மை காத்திருக்கு. மகராஷ்டிரா மாநிலம் பந்தர்பூருக்கு பயணிச்சா பல்வேறு விதமான பலன்கள அனுபவிக்கலாம்னு பெரியவங்க சொல்றாங்க.. நம்ம பிரதமர் மோடியே இதுபத்தி டிவிட் பண்ணிருக்கார்னா பாருங்களேன். சரி.. நீங்களும் பந்தர்பூர் போக ஆசப்படுறீங்களா? வாங்க... ஒரு எட்டு போய்ட்டு வருவோம்.
சயானி ஏகாதசி
சயானி ஏகாதசி என்பது மகா ஏதாதசி, பிரதாம ஏகதாசி, பத்ம ஏகதாசி, தேவ்சயானி ஏகாதசி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பகவான் விஷ்ணுவுக்கு உகந்த நாளாக இது கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் பகவான் விஷ்ணு உறங்கச் சென்றுவிடுவார் எனவும், நான்கு மாத காலம் தூங்கி எழுந்து மக்களை அருள்வார் எனவும் கூறப்படுகிறது.
அஸாடி ஏகாதசி அன்று விரதமிருந்து வழிபடுதன் பழநம்பிக்கை.
அஸாடி ஏகாதசி : திதி
ஜூலை 13 , பரன நேரம் : On July 13th, Parana time: 6:30 am to 8:49 am
ஜூலை 12, ஏகாதசி திதி தொடக்கம் : Ekadashi tithi begins: 1:02 am on July 12, 2019
ஜூலை 13, ஏகாதசி திதி நிறைவு : Ekadashi tithi ends: 12:31 am on July 13, 2019
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
சித்தேஸ்வரர் கோவில்
சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்குமாறு ஒரு அழகான ஏரியின் நடுவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த கோயில். சோலாப்பூர் நகரத்தின் மொத்தப் பகுதியிலேயே எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக இந்தக் கோயில் பெற்றுள்ளது. இந்த குளமும் அதனுள் அமைந்த கோயிளும் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
நால்துர்க்
சோலாபூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நால்துர்க் ஒரு பிரசித்தி பெற்ற வரலாற்று ஸ்தலம் ஆகும். மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மானபாத் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. முன்னர் ஏரல் கோட்டை என்று அழைக்கப்பட்ட இந்த கோட்டை முகலாய மன்னர்கள் வசம் வருவதற்கு முன்பு பாமனி சுல்தான்களுக்கு சொந்தமாக இருந்துள்ளது.இந்த நால்துர்க் கோட்டையானது அதில் அமைந்துள்ள நார் மற்றும் மடி என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
சந்த் பாவ்டி
சந்த் பாவ்டி எனும் இந்த குளம் அலி அடில் ஷா'வால் 1557ல் கட்டப்பட்டுள்ளது. பீஜாபூரின் கிழக்கு எல்லையில் இது அமைந்துள்ளது. இதை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவுக்குபின்னர் இந்த பீஜாப்பூரில் புதிய குடியிருப்புகள் உருவாகின.