மஹாராஜா பூபீந்தர் சிங். இவரைப் பற்றி வட இந்தியாவில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அவரின் புகழுக்கு காரணம் இவரிடம் இருந்த 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும், அந்தப்புரத்தில் 350 பெண்களுடன் இவரின் அழகிய வாழ்வும்தான். இவர் வாழ்ந்த அரண்மனை பற்றியும், அதன் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் காண்போம்.
44 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
இந்தியாவிலேயே அதிக அளவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்தது மஹாராஜா பூபீந்தர் சிங் தான். அவரிடம் 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்துள்ளன. அவர் அந்த கார்களை எதற்கெல்லாம் பயன்படுத்தி வந்தார் என்பதைக் கேட்டால் நீங்களே அதிர்ச்சியடைவீர்கள்.
ராஜாவின் அட்டகாசம்
அட்டகாசம் என்றவுடன் அவரை தவறாக புரிந்துகொள்ளவேண்டாம். அவர் மிகவும் கண்டிப்பானவராகதான் அறியப்படுகிறார். ஆனாலும் இவர் அரண்மனைக்குள் வித்தியாசமானவர். 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் பின்னால் வரவழைத்துவிட்டு இவர் முன்னால் நடந்து செல்லும் சில சுவாரசியமான தகவல்களும் இருக்கின்றன.
மதுப்பழக்கம் பெண் மயக்கம்
தன் அரண்மனையில் எப்போது இருந்தாலும் மஹாராஜா கோப்பையும் கையுமாகவே இருப்பார் என்று கூறப்படுகிறது. செல்வந்தராக திகழ்ந்த இவர் மாளிகைகள் பல கட்டவில்லை ஆனால் அவர் மாளிகையின் நான்கைந்து அந்தபுரங்களிலும் 350 பேர் வரை பெண்களை அமர்த்தியிருந்தார்.
அத்தனை மனைவிகள் நிறைந்த அரண்மனை
அவரது மாளிகையில் மிகவும் கண்கவரும் விதங்களில் கலை அழகுகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. பெண்களும் யாராவது அழகாக கண்ணில் பட்டால் ராஜா உடனே திருமணம் செய்துகொண்டு ராணியாக்கிவிடுவார் என்று கூறப்படுகிறது.
ராஜாவின் ராணிகள்
ராஜா அவரது ராணிக்களை மிகவும் அழகாக பார்க்கவேண்டும் என்பதற்காக நவீன அழகு சாதன பொருள்கள், பிளாஸ்டிக் சர்ஜரி விதவிதமான ஆடைகள் ஏற்பாடு செய்து கொண்டுள்ளார்.
வதந்தி
மஹாராஜா பூபீந்தர் சிங் தினமும் அதிக அளவு உணவு உண்பார் என புரளியும் உண்டு. அவர் ஒரு வேளைக்கு மட்டும் 9 கிலோ உணவு சாப்பிடுவாராம். அட! இது புரளி என்றே நம்பப்படுகிறது.
மோடி பாக் அரண்மனை
பாட்டியாலா மஹாராஜா குடும்பத்தினர் வாழ்ந்த அரண்மனை மோடி பாக் அரண்மனை ஆகும். இது 1840ம் வருடத்தில் கட்டப்பட்டது. இங்குதான் மஹாராஜா பூபீந்தர் சிங் பிறந்தார். 1920ம் வருடத்தில் இந்த அரண்மனை மிகவும் பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.
ஹெரிடேஜ் பெஃஸ்டிவல்
நினைவுச் சின்னங்களுக்கான திருவிழா இந்த இடத்தில் நடைபெறும். இது தற்போது மிகப் பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
மஹாராஜா யாதவிந்திர சிங்
இங்குள்ள நினைவுச் சின்னங்களின் பட்டியலில் முக்கியமானது மஹாராஜா யாதவிந்திர சிங்கின் சிலை ஆகும்.
ஓவியங்கள்
இந்த மாளிகையின் நடுவில் ஒரு பகுதியில் பழைய கால ஓவியங்கள் பல அமைந்துள்ளன. அவை இந்த மாளிகைக்கு அழகு சேர்க்கின்றன.