உலகமெங்கிலும் மனிதர்கள் குகைகளில் வசித்துக்கொண்டும், பச்சை மாமிசம் உண்டும், இலைகள் கோர்த்து ஆடையாய் உடுத்தி வந்த அதே காலத்தில் வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும், நல்லதோர் வாழ்க்கைக்கு நெறிகாட்டும் இலக்கியங்கள் படைத்தும், மருத்துவம், வான சாஸ்த்திரம், வேதம், போர்க்கலை போன்றவற்றில் கரைகண்டிருந்த அறிஞர்கள் வாழ்த்த திருநாடு 'இந்தியா'.
இத்தனை மகத்துவம் கொண்ட நாடாக இருந்து வந்தாலும் கால சுழற்சியில் படையெடுப்புகளாலும், நாடு பிடிக்கும் ஆசை கொண்ட நரிகளின் சூழ்ச்சியாலும் அடிமைப்பட்டு போனது இந்நாடு. அப்படி இரண்டு நூற்றாண்டுகள் வெள்ளையரிடம் அடிமைப்பட்டருந்த நமக்கு 1858 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு.
வெள்ளையருக்கு எதிரான வீர விதை தூவப்பட்ட ஆண்டு அது. அவ்வாண்டு வெள்ளையருக்கு எதிரான புரட்சியில் ஒரே இடத்தில் வைத்து 2,200 சுதந்திர போராட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடத்தை பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
{photo-featre}