மாண்டியா மாவட்டத்தின் சிவானசமுத்ர தீவு நகரத்தில் காணப்படும் இரட்டை நீர்வீழ்ச்சிதான் பராச்சுக்கி மற்றும் ககனசுக்கியாகும். இந்த நீர்வீழ்ச்சியானது காவேரி நதிக்கரையில் பிறக்க, 75 மீட்டர் அழகும்கொண்டு இரு பிரிவுகளாக பிரிந்து சிவானசமுத்ர நதி நோக்கி பாய்ந்தோடுகிறது.
இந்த இரு கிளைகளும் ஆழமான குறுகிய அழகுடன் காணப்பட, இரு பக்கங்களிலும் தீவானது உடைந்து பல கிலோமீட்டர்கள் இரண்டாக பிரிந்து பராசுக்கி மற்றும் ககனசுக்கி வீழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த கிழக்கு கிளையினை பராசுக்கி என நாம் அழைக்க, மேற்கு கிளையினை ககனசுக்கி எனவும் அழைத்திட; இந்த இரு வீழ்ச்சிகளையும் சிவானசமுத்ர வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது.
வழி வரைப்படம்:
தொடக்க புள்ளி: பெங்களூரு
இலக்கு: ககனசுக்கி & பராசுக்கி
இவ்விடத்தை காண சிறந்த நேரங்கள்: ஜூன் முதல் செப்டம்பர் வரையில்
எப்படி நாம் அடைவது?
ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?
பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான் அருகில் காணப்படுமோர் விமான நிலையமாக, தோராயமாக இங்கிருந்து 167 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது.
தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?
இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் மைசூரு சந்திப்புதான் அருகில் காணப்படுமோர் முக்கிய விமான நிலையமாகும். இந்த நிலையத்திற்கு வழக்கமான இரயில்கள் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் காணப்பட, நாடு முழுவதுமுள்ள பல இடங்களுக்கும் இரயில் வசதியானது காணப்படுகிறது.
சாலை மார்க்கமாக அடைவது எப்படி?
சிவான சமுத்ரத்தை அடைய நமக்கு சிறந்த வழியாக சாலை வழியானது காணப்படக்கூடும். அருகாமையில் காணப்படும் முக்கிய நகரமாக கொல்லேகல் காணப்பட, சாலையுடனும் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருப்பதோடு, வழக்கமான பேருந்துகளையும் பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திற்கு கொண்டிருக்கிறது.
PC: Ashwin Kumar
பயணத்துக்கான தூரம்:
பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்திற்கான ஒட்டுமொத்த தூரமாக 131 கிலோமீட்டர் காணப்படுகிறது. இங்கே செல்வதற்கு மொத்தம் மூன்று வழிகள் காணப்பட, அவை என்ன? என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.
வழி 1: பெங்களூரு - பிடாடி - ராமநகரா - சன்னாப்பட்னா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ர வழி தேசிய நெடுஞ்சாலை 275.
வழி 2: பெங்களூரு - தடகுனி - கனகபுரா - மாலவள்ளி - சிவானசமுத்ரம் வழி தேசிய நெடுஞ்சாலை 209.
வழி 3: பெங்களூரு - நெலமங்கலா - சோலூர் - குனிகல் - ஹுலியுர்துர்கா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரம் வழி குனிகல் - மத்தூரு சாலை.
PC: Ashwin Kumar
தேவைப்படும் நேரம்:
முதலாம் வழியை நாம் தேர்ந்தெடுக்க சிவானசமுத்ரத்தை அடைய நமக்கு தோராயமாக 3 மணி நேரம் தேவைப்பட வழியாக தேசிய நெடுஞ்சாலை 75ஆகவும் இருக்கிறது. இவ்வழியானது பெயர்பெற்ற நகரமான ராமநகரா, சன்னாப்பட்னா, மத்தூரு என பல வழியாகவும் செல்கிறது.
இந்த சாலைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டிருக்க, சிறந்த வேகத்தின் மூலம் 131 கிலோமீட்டரை கடந்து இலக்கையும் நம்மால் எட்ட முடிகிறது.
இரண்டாம் வழியை நாம் தேர்ந்தெடுக்க தோராயமாக 3.5 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 128 கிலோமீட்டர், பெங்களூருவிலிருந்து சிவானசமுத்ரத்தை அடைய நமக்கு தேவைப்பட வழியாக தேசிய நெடுஞ்சாலை 209 அமைகிறது.
மூன்றாம் வழியை நாம் தேர்ந்தெடுக்க இந்த 168 கிலோமீட்டரை நாம் கடக்க 4 மணி நேரங்கள் தேவைப்படுவதோடு, வழியாக குனிகல் - மத்தூரு சாலை முதல் சிவானசமுத்ரம் வரை அமைகிறது.
PC: Ashwin Kumar
ககனசுக்கி & பராசுக்கி:
இந்த ககனசுக்கி வீழ்ச்சியானது பெரும் குதிரை வால் வடிவத்தை கொண்டிருக்கிறது. இது செங்குத்தான நீர்வீழ்ச்சியாக அமைய பெரும் திசைவேகத்துடனும் கண்கொள்ளா காட்சியையும் கண்களுக்கு பரிசாய் தருகிறது. கடிகார கோபுரத்திலிருந்து நாம் பார்க்க, நீர்வீழ்ச்சியின் அழகால் நம் மனமானது வியப்பின் எல்லையில் பயணித்திடவும் கூடும்.
இந்த இரட்டை நீர்வீழ்ச்சியின் உயரமானது 98 மீட்டருக்கு இருக்க, இருப்பக்கங்களிலும் ஆதரவினை சேர்க்கிறது. இந்த கடிகார கோபுரத்திலிருந்து நாம் பார்க்க வீழ்ச்சியின் கீழே நீர் சேரும் அழகு நம்மை வெகுவாக கவர, நீரின் உள்ளே அல்லது அருகாமையில் பிரவேசிக்க சுற்றுலா பார்வையாளர்களுக்கு அனுமதியானது மறுக்கவும்படக்கூடும்.
பராசுக்கி தெய்வீகமாக கருதப்பட, இந்த இரண்டினுள் அதீத புகழுடனும் விளங்குகிறது. இங்கிருந்து விழும் நீரின் உயரமாக 69 மீட்டர் காணப்பட இரட்டை நீர்வீழ்ச்சியின் மத்தியில் அகலமாக விரிந்தும் செல்கிறது.
இங்கே வருபவர்கள் 200 சிமென்டால் பூசப்பட்ட குறுகிய படியை காண, அதன்மூலமாக நீர்வீழ்ச்சியின் அடித்தளத்தையும் நம்மால் அடைய முடிகிறது. இந்த வழியானது பாதுகாப்பாக அமைய, கடற்கரை போன்ற காற்றோட்டமான அமர்தலுக்கு ஏதுவாக அமைய, அசதியையும் இங்கே நம்மால் போக்கிக்கொள்ள முடிகிறது.
PC: Ashwin Kumar
பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் அழகிய காட்சி:
இந்த நீர்வீழ்ச்சியானது அற்புதமான காட்சியை பார்ப்பதற்கு நமக்கு தந்திட, குறிப்பாக பருவமழைக்காலத்தில் நீரானது வேகமாக பாய்ந்தோடி பாறையின் மீது மொதி அதிகரித்து காணப்படுகிறது.
இங்கே நீர்வீழ்ச்சியின் அழகினை நாம் ரசித்திட, பல வித புள்ளிகளிலிருந்தும் ஒட்டி உறவாடி நீர் சேரும் அந்த ஆழமற்ற பகுதியின் அடிப்பரப்பில் மனதையும் சேர்த்து தொலைக்கிறோம்.
இந்த அழகிய நீர்வீழ்ச்சியை நாம் காண சிறந்த வழியாக பரிசல் சவாரியானது அமைய, அது நம்மை அழகிய நீர்வீழ்ச்சியின் இதழ் நோக்கியும் அழைத்து செல்கிறது.
இங்கே வருபவர்கள் பனி உருவாக்க அழகை ரசித்திட, நீரும் வேகமாக பாறை மோதி தெறித்து கீழே செல்ல, அது பெருமூச்செறிந்து நம்மை பார்க்க வைப்பதோடு வியப்பின் எல்லையிலும் நம்மை பயணித்திட வைத்திடக்கூடும்.
PC: Ashwin Kumar
காட்சிகள் மற்றும் சாகசங்கள்:
பராசுக்கி ஒரு பிரிவாக அமைய, நீரானது குறைவான பருமனுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பிரிவானது சாகசத்தை நமக்காக தந்திட, நீர்வீழ்ச்சியின் கீழே நிற்கும் ஒருவர், தங்களுடைய தலையில் நீர் விழும் உணர்வையும் பெறுவர்.
இந்த பகுதியை நாம் அடைய, சாகசமானது நமக்காக காத்திருக்கும் என்பதே உண்மை, இவ்விடத்தை நாம் அடைய குறுகிய ஓடையை நாம் கடக்க வேண்டியதும் அவசியமாகும்.
இங்கே காணப்படும் ஓடையது, இடுப்பளவு ஆழத்தை கொண்டிருப்பதோடு மிகவும் வலுவான இடைவெளியை கொண்டிருக்க, ஆற்றுப்படுகையும் சரிவான பாறை படுகையை கொண்டிருப்பதோடு, அதீத கவனமானது நமக்கு அனைத்து நேரத்திலும் தேவைப்படக்கூடும்.
இந்த நீர்வீழ்ச்சியினை மற்றுமோர் வழியாக நாம் அடைய, அது தர்கா வழியாகவும் செல்ல அதுதான் ஹஷ்ராத் மர்தானே கைப் என்பதும் என தெரியவர, எதிர்வீச்சு ஓடையையும் நாம் ரசிப்பதோடு, பராசுக்கி வீழ்ச்சியின் அருகாமை அழகையும் நம்மால் ரசித்திட முடிகிறது.
PC: Ashwin Kumar