நம் நாட்டின் தலைநகரமாக மட்டுமே தில்லி விளங்காமல், பல பழமையான நினைவு சின்னங்களுக்கு புகலிடமாகவும் விளங்க, இங்கே கோட்டைகளும், மசூதிகளும், ஆலயங்களும் என பலவும் காணப்படுகிறது. இந்த நினைவு சின்னங்கள் யாவும் அதீத அழகுடன் காணப்படுவது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லாமலிருக்க, மதிமயக்கும் காட்சியையும் நம் கண்களுக்கு அவை தருகிறது. ஆனால் காத்திருக்க வேண்டியது அவசியமாக! இந்த நகரத்தில் நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் பலவெனவும் தெரியவருகிறது. இந்த நகரமானது சில சுவாரஸ்யமான இடங்களான சந்தை பகுதிகள், கலை அமைப்புகள், சிறு பாதைகள், இருவழி சாலைகள் என பலவற்றையும் கொண்டிருக்க, இவை பகிரப்படும் கதைகளோ தனித்துவமிக்கதாக காணப்பட, நினைவுக்கெட்டாத காலம் நோக்கியும் நம்மை அழைத்து செல்கிறது.
முதல் முறையாக நாம் தில்லிக்கு பயணிக்க, மிகவும் புகழ்மிக்க நினைவு சின்னங்களையும் நகரம் முழுவதும் நாம் காண, அவை முகலாய காலத்து நினைவு சின்னத்தில் தொடங்கி ஆங்கிலேய நினைவு சின்னத்துடன் இணைந்த நவீன அமைப்புகள் எனவும் தெரியவருகிறது. பலவும் கம்பீரமாக இல்லையென்றாலும், தில்லியில் குறைவாக பார்க்கப்பட்ட இடமாகவும் அவை அமைய, இவை அனைத்தும் நகரத்து நிகழ்ச்சிகளின் போது அலங்காரத்தால் நம்மை மிரட்டவும் தவறுவதில்லை. இங்கே தில்லியில் நாம் செய்ய வேண்டிய வித்தியாசமான விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
நிஷாமுதீன் தர்ஹாவின் க்யூவாலீஸை நாம் காணலாம்:
நிஷாமுதீன் அவுலியாவின் கல்லறையை வீடாக கொண்டிருக்கும் ஹஷ்ராத் நிஷாமுதீன் தர்ஹா, ஸுபி துறவியின் புகழ்மிக்க இடமாகும். இந்த தர்ஹாவானது ஸுபியை பின்பற்றுவோரை கொண்டு உலகம் முழுவதும் தினமும் பலரால் வந்து செல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வழிபடுவதற்கான அமைதியான இடமாகவும் இது அமைய, ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை வேளையில் க்யூவாலீஸ் பாடகர்களால் ஆத்மார்த்தமான குரல்கள் இங்கே எழுப்பப்படுகிறது.
இந்த நேரடி நிகழ்ச்சியானது, பாரம்பரிய இந்திய இசை கருவிகளை கொண்டு அரங்கேற, ஞானதிருஷ்டியடைய இங்கே பார்வையாளர்கள் வர, மன மகிழ்ந்து மதி மயங்க திரும்பவும் செல்கின்றனர்.
PC: Varun Shiv Kapur
ஆசியாவின் மாபெரும் வாசனை பொருட்கள் சந்தை:
பழமையான தில்லியின் பத்தேஹ்புரி மஸ்ஜித்துக்கு அடுத்து காணப்படும் காரி போலி சாலையில் காணப்படும் சந்தை தான் ஆசியாவிலேயே மொத்த விற்பனை வாசனை பொருள் சந்தையாகும். இந்த வாசனை பொருட்களானது முதன்முதலில் மேற்கத்திய நாடுகள் முதல் இந்தியாவிற்கான உறவை பலப்படுத்த உருவாக்கப்பட்ட சந்தையாக அமைய, பதினேழாம் நூற்றாண்டு முதல் வியாபாரம் இங்கே நடந்து வருகிறது.
இதன் அருகாமையில் மற்றுமோர் சந்தை பகுதி காணப்பட, அதுதான் கடோடியா சந்தை என அழைக்கப்பட, இங்கே பல வாசனை பொருட்கள் கடை காணப்பட, 1920ஆம் ஆண்டில் வளமான உள்ளூர் வியாபாரியால் கட்டப்பட்டது எனவும் தெரியவருகிறது.
PC: it's me neosiam
உணவு சுற்றுலாவிற்கு ஒப்பந்தம் போடலாம்:
நீங்கள் ஒரு தீனி விரும்பியா? அப்படி என்றால், நகரம் முழுவதும் காணப்படும் விரிவான 5 முதல் 6 மணி நேரம் உணவு சுற்றுலாவில் கலந்துக்கொள்ள, இங்கே ஒரு சில பெயர்பெற்ற உணவுகளானது நகரத்தில் சேர்ந்து கொள்கிறது. இங்கே காணப்படும் ஒரு சில வகை உணவுகள் நூற்றாண்டுகளை கடந்து காணப்படுகிறது.
இங்கே வருபவர்கள், குறுகிய சந்து மற்றும் நவீன தெருக்கள் வழியாக பயணிக்கவும் வாய்ப்பு கிடைக்க, அவற்றுள் நகரத்தின் மூலை முடுக்கில் காணப்படும் இடங்களும் அடங்க, தெரிந்துக்கொள்ளாத இடங்களிலும் சுற்றுலா கூட்டத்தை நம்மால் இங்கே காண முடிகிறது. இந்த சுற்றுலாவானது பழமை தில்லியின் வாசனை பொருள் சந்தைகளில் தொடங்கி குருத்வாராவின் சமுதாய சமையலறை வரை காணப்படுகிறது.
PC: gillnisha
தெருக்களின் வழியாக உலா வரலாம்:
தில்லியின் மறுப்பக்கத்தை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள, வழிக்காட்டுதலின்படி பஹர்காஞ்ச் தெருக்கள் வழியாகவுமென, புது தில்லி இரயில் நிலையத்தை சுற்றி நாம் சென்றிடலாம்.
இந்த நகரத்தின் சிறப்பான நடைப்பயண இடங்களுள் ஒன்றாக இது அமைய, சலாம் பாலக் அறக்கட்டளையால் இது நடத்தப்பட; இங்கே வாழும் குழந்தைகளால் சுற்றுலாவிற்கு வழிக்காட்டப்பட, தெருக்கள் வேலைப்பாட்டுடன் இருந்தாலும், தற்போது மறுவாழ்வும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கே நடப்பதன் மூலம் ஒருவர் கண்கள் விரிய, சரி சமமான உயிரோட்டத்தையும் அவர் பார்வைக்கு அது தர, நகரத்தின் கொடூரமான பக்கம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
PC: Unknown
காவலாளி மாறுவதை நாம் காணலாம்:
ராஷ்ட்ரபதி பவன் காவலாளி மாறுவதனை நாம் காண, உலகத்தில் நடைபெறும் பல ஒத்த விழாக்களுள் இதுவும் ஒன்றாக அமைகிறது. இந்த நகரத்தில் ஈர்த்திடாத தெரிந்துக்கொள்ளப்படாத விழாவாக இது இருக்க; 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த நிகழ்வானது அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த விழாவானது ஜனாதிபதி குடியிருப்பு முற்றத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நடந்திட, 200 பார்வையாளர்களை மட்டுமே இந்த விழாவில் பெரும்பாலும் காண முடிகிறது.
இங்கே வருபவரால், குதிரை சவாரியானது பார்க்கப்பட, ஜனாதிபதியின் காவலாளிகளால் குதிரைகளானது பின்னால் விழா சின்னம் நோக்கி நடைப்போடுகிறது. இந்த ஏற்பானது ராஷ்ட்ரபதி பவனில் தவிர்க்கப்பட, இந்த விழாவானது புது தில்லியின் இதயத்துடிப்பாக கம்பீரமான கட்டிடக்கலையை கற்கவும் உதவுகிறது.