வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.
ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.
சிகரங்கள்
சுமார் 3500 அடி உயரமுடைய இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது.
பாம்பாட்டி சுனை
பாம்பாட்டி சுனை
PC: surez
கைதட்டி சுனை
கைதட்டி சுனை
PC: tamilnadu tourism
சீதைவனம்
சீதைவனம்
அர்ச்சுனன் வில்
அர்ச்சுனன் வில்
PC: tamilnadu tourism
பீமன் களி உருண்டை
பீமன் களி உருண்டை
ஆண்டி சுனை
ஆண்டி சுனை
PC: tamilnadu tourism
விலங்குகள் நடமாட்டம்
இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது
இரவு பயணம்
ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.
PC: tamilnadu tourism
வெள்ளி மலை
வெள்ளி மலை எனப்படும் வெள்ளியங்கிரியே கயிலை மலை என்று போற்றப்படுகிறது. உத்தர கயிலை, மத்திய கயிலை, தட்சிண கயிலை எனக் கயிலை மூன்றாகும். உத்தர கயிலை வடக்கே நீர்ப்பகுதியில் உள்ளது. மத்திய கயிலை இமயமலையில் உள்ளது. வெள்ளியங்கிரியே தட்சிய கயிலையாகும். சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்.
PC: tamilnadu tourism