உலகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்வை வளர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் (தீம்) 'சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்' என்பதுடன், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான முக்கிய தூணாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் உலக சுற்றுலா தினம் பற்றியும், இந்தியாவில் சுற்றுலாவின் தாக்கத்தைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்!
எப்படி துவங்கியது - உலக சுற்றுலா தினம் என்பது ஐநாவின் சிறப்பு நிறுவனமான உலக சுற்றுலா அமைப்பினால் (UNWTO) கொண்டுவரப்பட்டது.
இந்த தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது - 1970 களில் இதே தேதியில் உலக சுற்றுலா ஒரு மைல்கல்லை எட்டியது. அதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனால் என்ன பலன் - சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
உலக அளவில் சுற்றுலாவின் பங்கு - சுற்றுலா உலகின் மிக முக்கியமான பொருளாதார துறைகளில் ஒன்றாகும். இது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு வேலைவாய்பு அளிக்கிறது.
இந்தியாவில் சுற்றுலாத் துறையின் பங்கு - உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) ஆராய்ச்சியின் படி, இந்தியப் பொருளாதாரத்தில் இந்தத் துறையின் பங்களிப்பு மிகுதியாக உள்ளது என்கிறது. கிட்டத்தட்ட ரூ. 33.8 டிரில்லியன் வருவாய் சுற்றுலா மூலம் கிடைக்கிறது.
உலக சுற்றுலா தினத்தின் முக்கியத்துவம் - உலக சுற்றுலா தினம் சுற்றுலாவை நோக்கிய மாற்றமாக கொண்டாடப்படும். இது வளர்ச்சியின் ஒரு முக்கிய தூணாக அங்கீகரிக்கப்பட்டு முன்னேற்றம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உலக சுற்றுலா தினத்தின் தீம் - இந்த ஆண்டின் கருப்பொருள் "சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்" என்பதாகும். கல்வி மற்றும் வேலைகள் மற்றும் சுற்றுலாவின் தாக்கம் மற்றும் இன்னும் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உட்பட, வளர்ச்சிக்கான சுற்றுலாவை மறுபரிசீலனை செய்வதே இதன் நோக்கமாகும்.
உலக சுற்றுலா தினம் 2022 கொண்டாடப்படும் இடம் - இந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் அதிகாரப்பூர்வ உலக சுற்றுலா தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.
உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம் - ஒவ்வொரு செப்டம்பரில், பல நாடுகள் நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, அதன் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அரங்கில் அதன் பங்களிப்பைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புகின்றன.
மேற்கூறியது மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மூலைகளில் உள்ள கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், ட்ராவல் ஏஜென்சிகளும், மாணவ மாணவியர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்கின்றனர்!