இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஸ்ஸாம் ஏழு சகோதர மாநிலங்களின் ஒன்றாக பல்லுயிர் பெருக்கத்திற்கான ஹாட்ஸ்பாட் ஆக திகழ்கிறது. பலதரப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அஸ்ஸாம், அடர்ந்த காடுகள், வெப்பமண்டல தட்பவெப்பநிலை, கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கூடிய பசுமையுடன் வாடா கிழக்கில் அமைந்துள்ள அழகிய பிரதேசங்களில் ஒன்றாகும். வனவிலங்கு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களை ஈர்க்கக்கூடிய அழகிய பூங்காக்கள் அஸ்ஸாமில் உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தவை இதோ உங்களுக்காக!
காசிரங்கா தேசியப் பூங்கா
இந்தியாவின் பல்வேறு தேசியப் பூங்காக்களில் ஒன்றான காசிரங்கா தேசியப் பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமாகும். உலகில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு இந்த தேசிய பூங்காவில் உள்ளன. நான்கு பெரிய ஆறுகளால் குறுக்கிடும் இந்த தேசிய பூங்காவில் அரிய வகை தாவரங்களும் விலங்கினங்களும் உள்ளன. ஆசிய யானைகள், புலிகள், குள்ளநரிகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், சதுப்பு நில மான்கள், காட்டு எருமைகள், சீனப் பாங்கோலின்கள், வங்காள நரிகள், கிப்பன்கள், சிவெட்டுகள், சோம்பல் கரடிகள் போன்ற விலங்குகள் கழுகுகள், ஓரியண்டல் ஹனி பஸார்ட், ஹிமாலயன் கிரிஃபோன் போன்ற பறவைகள் மற்றும் பல அரியவகை தாவரங்களையும் இங்கு காணலாம். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தில் இடம் பெற்ற ஒரு தேசிய பூங்காவாகும். யானை சஃபாரி, ஜீப் சஃபாரி மற்றும் படகு சஃபாரி ஆகியவை இங்குள்ள கூடுதல் அம்சங்களாகும்.
மனாஸ் தேசிய பூங்கா
யுனெஸ்கோவின் இயற்கை உலக பாரம்பரிய தளம், ப்ராஜெக்ட் டைகர் ரிசெர்வ், எலிஃபேன்ட் ரிசெர்வ் மற்றும் பயோஸ்பியர் ரிசெர்வ் என பன்முகம் கொண்ட மனாஸ் தேசிய பூங்கா பூட்டானுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆண்டு முழுவதும் ஒரு பொதுவான வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ள இந்த பூங்கா அரிய பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் போனது. காட்டு நீர் எருமைகள், அஸ்ஸாம் ரூஃப்டு ஆமை, கோல்டன் லங்கூர், ஹிஸ்பிட் ஹரே, பிக்மி ஹாக் மற்றும் பல அரிய வகை உயிரினங்களையும் தாவரங்களையும் இங்கேக் காணலாம்.
நமேரி தேசியப் பூங்கா
கிழலாம்.டின்சுகியா மாவட்டத்தின் ஈரநிலங்களில் அமைந்துள்ள திப்ரு சாய்கோவா தேசியப் பூங்கா கிரகத்தின் சில அரிதான உயிரினங்களின் தாயகமாகும். சதுப்பு நிலங்களின் திட்டுகள் பூங்கா முழுவதும் பரவி இருப்பதால், புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பறவைகள் என 500 க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இந்த பூங்கா புகலிடமாக உள்ளது. வெள்ளை இறக்கைகள் கொண்ட வாத்து, சதுப்பு வாத்து, வெள்ளை ரம்ப் கழுகு, காட்டு நீர் எருமை, ஹூலாக் கிப்பன், புலிகள் மற்றும் யானைகள் ஆகியவற்றை இங்கே எளிதாகக் காணலாம். பூங்காவில் ஜங்கிள் சஃபாரி மற்றும் யானை சஃபாரி இல்லாத காரணத்தினால் ட்ரெக்கிங் மற்றும் படகு சவாரி மூலமாக மட்டுமே பூங்காவை அணுகிட முடியும். குறிப்பாக படகு சவாரியின் போது கங்கை நதி டால்பின்களைக் கண்டு ம
கிழக்கு இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, நாட்டின் சில அரிய விலங்குகள் மற்றும் பறவை இனங்களைக் காண வாய்ப்பு வழங்குவதோடு மட்டுமில்லாமல் அழகான இமயமலையின் பனி மூடிய சிகரங்களையும், மலைகளையும் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக உள்ளது. ஐபிஸ் பில், ரீத் ஹார்ன்பில், பிளாக் ஸ்டோர்க், ரூஃபஸ் நெக்ட் ஹார்ன்பில் போன்ற பறவைகளைக் கொண்டு இந்த பூங்கா பறவை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகவே உள்ளது எனலாம். ராயல் பெங்கால் புலிகள், இமயமலை கருங்கடிகள், காட்டுப்பன்றிகள், இந்திய ராட்சத அணில்கள் மற்றும் பல அரிய வகை தாவரங்களையும் இங்கு கண்டு களிக்கலாம்.
திப்ரு சாய்கோவா தேசியப் பூங்கா
கிழலாம்.டின்சுகியா மாவட்டத்தின் ஈரநிலங்களில் அமைந்துள்ள திப்ரு சாய்கோவா தேசியப் பூங்கா கிரகத்தின் சில அரிதான உயிரினங்களின் தாயகமாகும். சதுப்பு நிலங்களின் திட்டுகள் பூங்கா முழுவதும் பரவி இருப்பதால், புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பறவைகள் என 500 க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இந்த பூங்கா புகலிடமாக உள்ளது. வெள்ளை இறக்கைகள் கொண்ட வாத்து, சதுப்பு வாத்து, வெள்ளை ரம்ப் கழுகு, காட்டு நீர் எருமை, ஹூலாக் கிப்பன், புலிகள் மற்றும் யானைகள் ஆகியவற்றை இங்கே எளிதாகக் காணலாம். பூங்காவில் ஜங்கிள் சஃபாரி மற்றும் யானை சஃபாரி இல்லாத காரணத்தினால் ட்ரெக்கிங் மற்றும் படகு சவாரி மூலமாக மட்டுமே பூங்காவை அணுகிட முடியும். குறிப்பாக படகு சவாரியின் போது கங்கை நதி டால்பின்களைக் கண்டு ம.
நமேரி தேசியப் பூங்கா
கிழக்கு இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, நாட்டின் சில அரிய விலங்குகள் மற்றும் பறவை இனங்களைக் கண்டறியும் வாய்ப்பை வழங்குவதோடு இமயமலையின் அழகை ரசிக்கவும் வழி செய்கிறது. சதுப்பு நிலங்கள் மற்றும் சூழலியல் காரணமாக இந்த பூங்கா பறவை ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது. புலி, இமாலய கருப்பு கரடி, காட்டுப்பன்றி மற்றும் இந்திய ராட்சத அணில் போன்ற விலங்குகளுக்கும் குறிப்பாக யானைகளுக்கும் இந்த பூங்கா புகலிடமாக உள்ளது. ஐபிஸ் பில், கிரீடட் ஹார்ன் பில், கருப்பு நாரை மற்றும் ரூஃபஸ் கழுத்து ஹார்ன்பில் போன்ற பறவைகள் இங்கு வசிக்கின்றன.
அஸ்ஸாமில் காலநிலை எப்பொழுதுமே சற்று இதமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அஸ்ஸாமிற்கு சென்று வருவது பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது, ஏனெனில் மே மாதம் முதல் பருவமழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்கும். அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களுடன் ரயில் இணைப்பைக் கொண்டுள்ளது. மேலும் கவுகாத்தியில் விமான நிலையம் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்தே ஒன்றே!